districts

திருச்சி முக்கிய செய்திகள்

பெண் தலைமை காவலரை தாக்கியவருக்கு சிறை 

அரியலூர், நவ.23- ஜெயங்கொண்டத்தில் பெண் தலைமை காவலரை திட்டி தாக்கியவருக்கு இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  இடைக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் மனைவி இளவரசி (34) ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில்  தலைமை காவலராக உள்ளார்.  இவர் 2021 ஜூன் 15ஆம் தேதி அன்று இரவு பணி முடித்துவிட்டு இடைக்கட்டு கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சின்ன வளையம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டி ருந்தபோது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.  இதுகுறித்து இளவரசி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த இரண்டு நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்த வல்லரசு என்கிற இளங்குமரன் (24), பிரபாகரன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி லதா, தலைமை காவலர் இளவரசியை வழிமறித்து திட்டி தாக்கிய வல்லரசு என்கிற இளங்கும ரனுக்கு இரண்டு மாதம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். முன்பாகவே பிரபாகரன் விடுவிக்கப்பட்டார்.

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு  மானியத்தில் வேளாண் கருவி

தஞ்சாவூர், நவ.23 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலக்கடலை, மக்காச்சோளம், நெல் மற்றும்  பயறு வகை பயிர்களுக்கு விதைக் கலப்பை இயந்திரத்தின் மூலம், விதை விதைக்கும் கருவியானது  வேளாண்மை துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்பட இருக்கிறது.  அந்த இயந்திரத்தின் முழு விலை ரூ 87,181 ஆகும். மானியம் ரூ 23,100 போக, விவசாயி பங்கு தொகை ரூ 64,081 ஆகும். மானியம் போக விவசாயின் பங்கு தொகையை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.  இந்த விதை உருளை கருவியானது, விதைகளை சீராக விதைப்பதற்கும், குறிப்பிட்ட ஆழத்தில், குறிப்பிட்ட இடைவெளியில் விதைகளை விதைப்ப தற்கும் பயன்படுகிறது.   எனவே, பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சார்ந்த ஆதி திராவிட பிரிவு விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி, மானி யத்தில் வழங்கப்படும் விதைப்பு இயந்திரத்தைப் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ரயில் தண்டவாளத்தில் சடலம் மீட்பு

அரியலூர், நவ.23- அரியலூர் அருகே ரயில் தண்ட வாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. மகாலிங்கபுரம் ரயில்வே கேட் அருகே சுமார் 45 வயது மதிக்க தக்க ஆண் சடலம் கிடப்பதாக, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வர்கள் ரயில்வே காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமையன்று தகவல் தெரிவித் தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசா ரிக்கின்றனர்.

பெண்ணிடம் ரூ.21லட்சம் மோசடி:  தனியார் கைப்பேசி நிறுவன முகவர் கைது

தஞ்சாவூர், நவ.23 -  தஞ்சாவூரில் பெண்ணிடம் போலியான ஒப்பந்த ஆவணத்தைக் கொடுத்து ரூ.21.06 லட்சம் மோசடி செய்ததாக தனியார் கைப்பேசி நிறுவன முகவரைக் காவல் துறை யினர் கைது செய்தனர். தஞ்சாவூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் பைசல் அகமது (25). இவர் தனியார் கைப்பேசி நிறுவனத்தின் இணையதள இணைப்புகள் வழங்கும் முகமையை நடத்தி வந்தார். இவர் தஞ்சா வூர் தொல்காப்பியர் சதுக்கம் முதல் ஞானம் நகர் வரை இணையதள இணைப்புகள் கொடுப்பதற்கான முகமையைப் பெற்றுத் தருவதாகவும், அதன் மூலம் நிறைய லாபம் கிடைக்கும் எனவும் மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்துக்குட்பட்ட செந்நகரம் பட்டியைச் சேர்ந்த தமிழன்பன் மனைவி திவ்யாவிடம் (28) கூறினார். இதைத் தொடர்ந்து, திவ்யாவிடம் வங்கி பரிவர்த்தனை மூலம் 2021 ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் நிகழாண்டு மார்ச் 30 வரை பல்வேறு தவணைகளில் பைசல் அகமது ரூ.21.06 லட்சம் வாங்கினார். திவ்யாவிடம் தனியார் நிறுவன பெயர் பொறிக்கப்பட்ட ஒப்பந்த ஆவணத்தை வழங்கினார். இதன் பின்னர் திவ்யா பல முறை முயன்றும் பைசல் அகமதுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து திவ்யா, தனியார் நிறுவனத்திடம் பைசல் அகமது வழங்கிய ஒப்பந்த ஆவணத்தைக் காட்டியபோது, அது போலியானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவில் திவ்யா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து பைசல் அகமதுவை  கைது செய்தனர்.

நவ.28 இல் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், நவ.23 -  தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 28 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக,  பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.  கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயி கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று பின் மனுக்களை அளிக்க வேண்டும்.  எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியில் குண்டும்குழியுமான  சாலையால் மக்கள் அவதி

பாபநாசம்,நவ.23- கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசத்தை அடுத்துள்ளது ராஜகிரி ஊராட்சி. இங்கு மாதா கோயில் தெருவிற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேறும், சகதியுமாக நடந்து செல்லக் கூட முடியாத நிலையில் உள்ளது. இந்தச் சாலைப் போடப்பட்டு பதினைந்து வருடங்களுக்கு மேலாகின்றது.  இந்தச் சாலை வழியே பண்டாரவாடை, தேவராயன் பேட்டை, கோடுகிழி, ஒன்பத்து வேலி உள்ளிட்ட பகுதி களுக்குச் செல்லலாம். ரயில்வே நிலையத்திற்கும் இந்த வழியேதான் செல்ல வேண்டும். இந்தச் சாலை அருகில் பால்வாடி உள்ளது. சாலை என்பதே இல்லாததால் மழை நாட்களில் இதன் வழியே நடப்பது சிரமமாக உள்ளது. வயதானவர்கள், குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர். புதிய தார்ச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொலை முயற்சி வழக்கில்  ரௌடிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

அரியலூர், நவ.23-  அரியலூர் அருகே இளைஞரை கொல்ல முயன்ற  வழக்கில் ரௌடிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் ரமேஷ் (24) என்பவருக்கும், ரௌடி வெங்கடேச னுக்கும் இடையே இடப் பிரச்னை தொடர்பாக கடந்த 16.8.2020 அன்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், ரமேஷை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து அரியலூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட குற்ற வியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் அளித்த தீர்ப்பில்,  அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் குற்றவாளி சரவணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து வெங்கடேசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குழந்தையை விற்பனை  செய்த தம்பதி கைது

சிவகாசி, நவ.23- விருதுநகர் மாவட்டம் சிவகாசி முனீஸ்வரன் காலனி யைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி மகா லட்சுமி. இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை, புரோக்கர்கள் சுப்பிர மணி, நாகராஜ் உதவியுடன் திருச்சி மாவட்டம் துறை யூர் பெருமாள்பாளையத்தை சேர்ந்த செல்வம்-சந்திரா தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், குழந்தையை விலைக்கு வாங்கிய செல்வம்- சந்திரா தம்பதியினர் போலியாக பிறப்பு சான்றி தழை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி காவல்துறையினர் செல்வம்- சந்திரா ஆகியோரைக் கைது செய்தனர். 

எடப்பாடி பொறுப்பில் இருக்கும் வரை அதிமுக இணையாது  டிடிவி.தினகரன் கருத்து

புதுக்கோட்டை, நவ.23:-  எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருக்கும்வரை அதிமுக இணைய வாய்ப்பு இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.  புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரட்டை இலை சின்னம் இருந்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பலவீனம் பட்டுக்கொண்டு வருகிறது. அதை மறைக்க அமமுகவிலிருந்து நிர்வாகிகளை  கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர், யாரோ ஒரு சிலரை விலைக்கு வாங்குவதால் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையே விலைக்கு வாங்கிவிட்டதாக பகல் கனவு காண்கின்றனர்,  ஆளுநர் ஊழல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் விதமாக கோப்புகளை காலம் தாழ்த்தியது ஆளுநரின் தவறான செயல். ஆளுநர் இதுபோன்ற தவறான முன்னுதாரணங்களை செயல்படுத்தினால் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் துணிந்து ஊழல் செய்வதற்கும் வழி வகுக்கும். பலரை பாதுகாக்கும் விதமாக ஆளுநர் செயல்படுவது தவறு. அறநிலையத்துறையில் முறைகேடுகள் இருந்தால் அதை சரி செய்ய வேண்டுமே தவிர, அந்தத் துறையே இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு தவறானது. தனியார் கையில் கொடுத்தால் அறநிலையத்துறை கோயிலுக்கு உள்ள இடங்களே இல்லாமல் போய்விடும். எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இல்லை. கொடநாடு வழக்கில் காவல்துறையினர் சாட்சிகளை விசாரிக்கின்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிறைய சாட்சிகள் தடயங்கள் அழிக்கப்பட்டதாக புகார்கள் இருக்கின்றன. விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களின் விருப்பம் என்று தெரிவித்தார்.