districts

திருச்சி முக்கிய செய்திகள்

மீனாட்சி மருத்துவமனையின்  சலுகை அடையாள அட்டைகள் வழங்கல்

தஞ்சாவூர், ஏப்.15- தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் சலுகை அடையாள அட்டைகள் கிஸ்வா பொதுக்குழு  உறுப் பினர்களுக்கு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் கிஸ்வா அமைப்பு செயலாளர் அ.சிரா ஜூதீன், மீனாட்சி மருத்துவமனை மக்கள் தொடர்பு அதி காரி மணிவாசகம் ஆகியோர் தலைமை வகித்தனர். கிஸ்வா மருத்துவ சேவை திட்டக்குழு தலைவர் ஜே.ஜா ஹிர் உசேன், கிஸ்வா நிர்வாக குழு உறுப்பினர் குடந்தை  அய்யூப் கான், மீனாட்சி மருத்துவமனை வணிகத்துறை பொது மேலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட  னர்.

ரேசன் அரிசி கடத்தல்: இருவர் கைது
 

புதுக்கோட்டை, ஏப்.15-  தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புல னாய்வுத் துறை காவல் துணைக் கண்கானிப்பாளர் சர வணன் தலைமையில் காவல்துறையினர், புதுக்கோட்டை  மாவட்டம் கல்லூர் சுதந்திராபுரம் அருகே வெள்ளிக் கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த காரை சோதனை செய்த போது, அந்தக் காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த கே. தெக்கூர் சாத்தப்பன் மகன் முருகேசன்(37), ஓட்டுநர் கே. ராயவரம் கிருஷ்ணன் மகன் அரவிந்தன்(25) ஆகிய இரு வரையும் கைது செய்தனர்.

தீத்தொண்டு தினம் அனுஷ்டிப்பு

பேராவூரணி, ஏப்.15-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீத்தொண்டு தினம் அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையில் தீத்தொண்டு தின நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலர் மருத்துவர் துரை.நீலகண்டன் கலந்து கொண்டு, மறைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, வீரர்களை பாராட்டிப் பேசினார்.  தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், விக்னேஷ், ஆகாஷ் கண்ணன், வினோத், நிரஞ்சன், விமல் ராஜ், வெங்கடேசன், செல்வகுமார், குமரேசன், சாரதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

அரசுக் கல்லூரியில் விளையாட்டு விழா 

தஞ்சாவூர், ஏப்.15- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில், சனிக்கிழமையன்று விளை யாட்டு விழா நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் பொறுப்பு சி.ராணி தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் ராஜ்மோகன் வர வேற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்க தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ச.முருகானந்தம் வாழ்த்திப் பேசினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர்  ப.ஞானசேகரன் நன்றி கூறினார்.  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப் பாளர் முனைவர் கே.வெற்றிவேல் கலந்து கொண்டு பரிசு கள் வழங்கினார். 


ஆட்சியர் அலுவலக வாகனம் பொது ஏலம்

கரூர், ஏப்.15- கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பயன்பாட்டிற் கான வாகனம் முதிராநிலையில் கழிவு நீக்கம் செய்யப் பட்டு பொது ஏலமானது ஏப்ரல் 18 அன்று காலை 11 மணிக்கு  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெறவுள்ளது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 18 அன்று  காலை 10 மணி முதல் 11 மணி வரை ரூ.2 ஆயிரம் முன்  வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெய ரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத் தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகை மற்றும் வரி யுடன் சேர்த்து ஏப்ரல் 18 அன்று உடனே செலுத்திட வேண்டும். ஏலம் எடுக்க விரும்புவர்கள் ஏப்ரல் 10 அன்று  காலை 10 முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை வாக னத்தை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிபிஎம் தெருமுனைக் கூட்டம் 

ஒரத்தநாடு, ஏப்.15-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, தெரு முனை பிரச்சாரக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கு. பாஸ்கர், ஜெயராமன், காங்கிரஸ் ஜெயசூரியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

பசுமை சாம்பியன் விருது  பெற விண்ணப்பிக்கலாம்

கரூர், ஏப்.15- தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம்  மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப் புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை  சாம்பியன் விருது வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சிய ரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தேர்வு செய்யப்ப டும் 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருட மும் தேர்வு செய்யும். இதில் கரூர் மாவட்டத்திற்கென 3  விருதுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக் கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட  சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கரூர் என்ற முகவரியை அணுகலாம். எனவே, விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திலோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய இணைப்பு  ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்  வழங்கும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுக் கான விண்ணப்பத்தையும் உடன் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

கோடை உழவின் அவசியம், நன்மைகள்: வேளாண்துறை விளக்கம் 


தஞ்சாவூர், ஏப்.15-  நடப்பு கோடை பருவத்தில் பல இடங்களில் மழை பெய்து வரும் சூழ்நிலையை பயன்படுத்தி விவசாய பெரு மக்கள் அனைவரும் கோடை உழவு செய்திட வேண்டும்  என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்கு நர் விநாயகமூர்த்தி வழங்கியுள்ளார். கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்யப் படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங்களும் விரயமாகும். கோடை உழவில் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கப்படுவதால் நிலபரப்பின் கீழ் ஈரப்பதம்  காத்து பூச்சிகள், பூஞ்சான்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு  ஏதுவாகிறது. ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிக ரிப்பதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கோடையில் உழு வதால் மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவைகளுக்கு இரையாக்கப் பட்டும், வெயிலிலும் கொல்லப்படுகிறது. மேலும் களை களின் வேர்ப்பகுதி களையப்பட்டு முளைப்புதிறன் வெகு வாக குறைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த  காலநிலையை பயன்படுத்தி நிலத்தை வளமான நிலமாக மேம்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

நகை கடையை உடைத்து ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை 

தூத்துக்குடி, ஏப்.15- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில்  நகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5  லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(38). இவர் எட்டயபுரம் பஜாரில் நகைக்கடை நடத்தி வரு கிறார். வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு சென்றார்.  சனிக்கிழமை காலை  அவரது கடை உடைக்கப்பட்டு கிடந்தது.தகவல் அறிந்து எட்டயபுரம் காவல் ஆய்வா ளர் ஜின்னா பீர்முஹமது தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கடைக்குள் கண்ணாடிப் பேழைக்குள்  வைக்கப்பட்டிருந்த வெள்ளிக் கொலுசுகள்,  வெள்ளிக் கொடி தண்டைகள் மற்றும் பழைய வெள்ளி பொருட்கள் என ஐந்து லட்ச  ரூபாய் மதிப்புள்ள சுமார் ஏழு கிலோ  வெள்ளிப் பொருட்கள் திருடுபோயிருந்தன.  தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியின் கைப்பிடிகள் உடைக்கப் பட்டிருந்தன. அதைத் திறக்க முடியாததால் தங்க நகைகள் தப்பியுள்ளன.  கடையின் வெளியே பொருத்தப்பட்டி ருந்த கண்காணிப்புக் கேமரா உடைக் கப்பட்டுள்ளது. கடைக்குள் இருந்த கேம ராக்கள் திசை மாற்றி வைக்கப்பட்டுள்ளது. கேமராப் பதிவுகளை சேமிக்கும் டி.வி.ஆர். மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவை சேதப் படுத்தப்பட்டுள்ளது.

தோழர் என்.சங்கரய்யாவின் சகோதரி  மீனாட்சி அம்மாள் காலமானார்

சென்னை, ஏப். 15- தோழர் என்.சங்கரய்யா வின் சகோதரி மீனாட்சி அம்மாள் (91) குரோம் பேட்டையில் சனிக்கிழமை (ஏப். 15) அதிகாலை கால மானார்.  மறைந்த மீனாட்சி அம் மாள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா வின் இளைய சகோதரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.நரசிம்மனின் மாமி யாரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழு அலுவலக முன்னாள் செயலாளராக பணியாற்றிய மோகன் (எ) கல்யாணசுந்தரத்தின் தாயும் ஆவார். அவரது உடலுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் தாமோதரன், பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், 28ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 16) காலை 9 மணியளவில் குரோம்பேட்டை பல்லவ புரம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.