districts

img

திருநங்கைகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கல்

தஞ்சாவூர், ஜூன் 12-  

     தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  

     இக்கூட்டத்தில், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர். இதனைத் தொ டர்ந்து, மாணவி ஒருவருக்கு முதலமைச்சர் பொது நிவா ரண நிதியிலிருந்து, தொழில் கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ.50 ஆயிரத் திற்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ  காப்பீட்டு திட்டத்தின் கீழ், 13 திருநங்கை களுக்கு முதலமைச்சர் இலவச மருத்துவக்  காப்பீட்டு அடையாள அட்டையினை ஆட்சியர் வழங்கினார்.