தஞ்சாவூர், ஏப்.5 - தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவது எந்த வகையில் நியாயம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி கேள்வி எழுப்பினார். தஞ்சாவூர் விளார் சாலை பர்மா காலனியில், திமுக வேட்பா ளர் ச.முரசொலிக்கு ஆதரவாக வியாழக்கிழமை மாலை சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாடுவதற்காக அம லாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற நிறுவனங் களை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. இந்த அமைப்புகளைப் பயன்படுத்தி ஊழல் என்ற பெய ரில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சி, அதானியின் பங்குச்சந்தை ஊழல், அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச் ஊழல், சி.ஏ.ஜி. அறிக்கை யில் வெளியிடப்பட்ட மோடி ஆட்சி யின் தில்லுமுல்லுகள், தேர்தல் பத்திர ஊழல் போன்ற ஊழல் களைச் செய்துள்ளது. மத்தியில் ஆளும் கட்சியே ஊழல்கள் செய்வ தன் விளைவாக, மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பாஜகவுக்கு 35 மருந்து நிறுவ னங்கள் தேர்தல் பத்திரங்களைக் கொடுத்தன. இதனால் அந்நிறுவ னங்கள் தயாரித்த மருந்துகள் தரம் குறைவான, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பது விசாரணையில் தெரிய வந்தது. மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அச்சாணியாக இருக்கக் கூடிய சரத்சந்திர ரெட்டி 2022 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் எந்தவித ஆட்சே பணையும் இல்லாமல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் கூறியதாகக் கூறி, அரவிந்த் கெஜ்ரி வால், பாரதிய ராஷ்டிரிய சமிதி கவிதாவை கைது செய்துள்ளனர். காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறையைக் கொண்டு முடக்கி விட்டு, எதிர்க் கட்சிகளை எல்லாம் செயல்பட விடாமல் செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்கிவிட்டு, மோடி என்ற ஒற்றைத் தலைவர் மட்டும் தேர்தலில் நிற்பது எந்த வகையில் நியாயம். தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தாலும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வரவர நமக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்து வரு கிறது. பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இணைந்து தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதுதான் சட்டம். அப்போதுதான் அது நேர்மையாக வும் இருக்கும்.
ஆனால் ஒன்றிய அரசாங்கம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறுவதை தடுக்கும் வகை யில், ஒன்றிய அரசின் இரண்டு பிரதி நிதிகள் அந்த குழுவில் இருக்க லாம் என சட்டம் கொண்டு வந்துள் ளது. ஆளும் அரசுக்கு ஆதரவாக இரண்டு பிரதிநிதிகள், எதிர்க்கட்சி சார்பில் ஒரு பிரதிநிதி இருந்தால் அந்த ஆணையத்தின் செயல்பாடு எவ்வாறு இருக்கும். இந்தப் பெரியார் மண்ணில் தாமரை மலராது என்பதை மீண்டும் நிருபித்துக் காட்ட வேண்டிய தேர்தல் இது. எனவே, இந்தியா கூட்டணியைச் சார்ந்த திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு வாக்க ளிக்குமாறு கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், தேர்தல் பொறுப்பாளரும், மாவட் டச் செயற்குழு உறுப்பினருமான கோ.நீலமேகம், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி, மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், பல்வேறு அரங்கங்களின் நிர்வாகி கள், திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பாப்பாநாடு இதேபோல் வியாழக்கிழமை மாலை ஒரத்தநாடு ஒன்றியம் பாப்பாநாடு கடைவீதியிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ் குமார், ஒன்றியச் செயலாளர் கோவிந்த ராஜ் மற்றும் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.