அரியலூர், ஆக.10-
அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலை யங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்கா ணிக்கும் வகையில், பிஇடிஎஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
செயலி அறிமுக நிகழ்வு மாவட்டக் காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடை பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ் கான் அப்துல்லா, செயலியை அறிமுகப்படுத்தி னார். இந்தச் செயலியில், காவல் நிலை யத்துக்கு வரும் மனுதாரர்கள், எதிர்மனு தாரர்கள், மனு விபரம், எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை, காவல் நிலையத்தில் பணி புரி யும் வரவேற்பு அலுவலர்கள் மூலம் உடனுக்கு டன் பதிவு செய்யப்படுவது குறித்தும், மனுக்க ளின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித் தும் உட்கோட்ட துணைக் கண்காணிப்பா ளர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வெங்க டேசன், சங்கர் கணேஷ், ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து காவல்நிலைய வரவேற்பு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.