புதுக்கோட்டை, பிப்.6 - பட்டியலின மக்கள் மற்றும் அரசி யல் கட்சியினரின் கோரிக்கையை அடுத்து வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அறிக்கை அனுப்ப உள்ளதாக தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து விபரங்களைக் கேட்ட றிந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியி லிருந்து எடுக்கப்பட்ட மாதிரி, 6 பேரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்து குற்றவாளிகளை கண்டறிய முடியாது. தொட்டியில் தண்ணீர் திறந்து விடுபவருக்கும், ஊராட்சித் தலைவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இது நிகழ்ந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்துள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நினைக்கின்றனர். மனிதக் கழிவு கலந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அறிவியல் சோதனைக்கு ஏற்றதாக இல்லை. பெரிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதால், அதிலிருந்து எடுக்கப் படும் மாதிரிகள் உகந்ததாக இல்லை. டிஎன்ஏ பரிசோதனை மாதிரி முடிவு கள் ஒத்துப்போகவில்லை என்பதற்காக குற்றம் நடக்கவில்லை என்று கூறிவிட முடியாது. வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பட்டியலின அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தெரி விக்கின்றனர். இவர்களின் கோரிக் கையை அறிக்கையாக அனுப்ப உள் ளோம். இதுகுறித்து ஆணைய தலை வர் முடிவெடுத்து பரிந்துரைப்பார். இந்த வழக்கில் உண்மை கண்டறி யும் சோதனையை ஆணையம் வரவேற் கிறது. ஆனால் அந்த சோதனையை பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது நடத்தக் கூடாது. சட்டத்தின் மூலம் சிறிதுதான் செய்ய முடியும். கல்விதான் இதற்குத் தீர்வாக அமையும். மக்கள் மனம் மாறினால்தான் இது போன்ற சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக்க முடி யும். மனநோயில் உள்ளவர்கள்தான் இது போன்று செயல்படுவார்கள். இந்த வழக்கில் நிச்சயம் குற்றவாளிகள் கண்டறியப்படுவார் கள். அது காவல்துறையினராக இருக்க லாம். சிபிசிஐடி போலீசாராக இருக்க லாம். அல்லது சிபிஐ-யாக இருக்கலாம். ஏதாவது ஒரு விசாரணை அமைப்பு இந்த வழக்கின் குற்றவாளிகளை நிச்சயம் கண்டுபிடிக்கும்.