திருச்சிராப்பள்ளி, மே 10-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் ஊரக மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கி ணைந்த அலுவலக வளாக கட்டிடத்தை புதனன்று திறந்து வைத்தார்.
இதேபோன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சமயபுரம் மாரியம்மன் கோவில் பெருந்திட்ட வளா கத்தில் ரூ13.80 கோடி மதிப் பில் கட்டப்பட்டுள்ள பக் தர்கள் வரிசை வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஊராக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் தேவ நாதன், மகளிர் திட்ட அலு வலர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் கங்காதாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.