districts

img

இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா

திருச்சிராப்பள்ளி, அக்.4 - பொதுத்துறை இன்சூ ரன்ஸ் நிறுவன ஊழியர்க ளின் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உடனடியாக உயர்த்தி வழங்க வேண் டும். என்பிஎஸ் திட்டத்தில் நிறுவனங்களின் பங்க ளிப்பை 14 சதவீதமாக உயர்த்த வேண்டும். 1.8.22  முதல் ஊதிய மறுசீர மைப்பு தொடர்பான பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும். காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசுத் துறை பொது இன்சூ ரன்ஸ் அதிகாரிகள், ஊழி யர்கள் மற்றும் நலச் சங்கங் கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதனன்று திருச்சி ஒத்தக்கடை பகுதி யில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மதுரை மண்டல அலுவ லகம் முன்பு தர்ணா போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு யுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ்  அதிகாரிகள் சங்கத் தலை வர் ஸ்ரீதரன் தலைமை  வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் முத்துக்குமரன், நேசனல் இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க அய்யாசாமி, பொது காப்பீட்டு ஊழியர்கள் அகில இந்திய சங்க திருச்சி செய லாளர் செந்தில், எஸ்.சி,  எஸ்.டி பரிசத் நலச்சங்க தலைவர் ஜி.செந்தில், எல்.ஐ.சி. தஞ்சை கோட்ட  தலைவர் ஜோன்ஸ், போராட் டக் குழு ஒருங்கிணைப்பா ளர் ராஜமகேந்திரன், ஓய்வூ தியர் சங்க துரைசாமி, மணி வேல் ஆகியோர் பேசினர்.  அனைத்து சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர்.