districts

img

4 ஆண்டுக்குப் பிறகு தஞ்சை ஆலக்குடி விவசாயிகளுக்கு ரூ.8.62 லட்சம் பயிர்க்காப்பீடு இழப்பீடு

தஞ்சாவூர், அக்.19 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் சம்பா சாகுபடி யின் போது, போதிய மகசூல் இல்லாத தால், பயிர் காப்பீடு இழப்பீடு கேட்டு நீதிமன்றம் மூலம் போராடிய 17 விவ சாயிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு காப்பீடு இழப்பீட்டுத் தொகை யாக ரூ.8.62 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் சம்பா சாகுபடியின்போது போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். இதில், தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம், ஐம்பது மேல்நகரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகசூல் இழப்பு ஏற்பட்டதால், தாங்கள் செலுத்திய பயிர் காப்பீடுக்கான இழப்பீடு தொகையை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் முதல் தமிழக முதல்வர் வரை அனைத்து அதி காரிகளுக்கும் கோரிக்கை மனுவை அனுப்பினர். ஆனால், இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை.  இதனால், இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வழக்குரைஞர் வெ.ஜீவக்குமார் மூலம், பயிர் காப்பீடு நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.  இதில் முதலில் ஆலக்குடியைச் சேர்ந்த பாரதி, கவுன்ராஜ், கற்பக வள்ளி, அன்பழகன், சுமதி, சரவணன், பூமிராஜா, அமுதா, சங்கீதா, வைரம், சரிதா, மணிவாசகம், குணசேகரன், ரவிச்சந்திரன், சதீஷ், கணேசன், அன்பு மணி உள்ளிட்ட 17 விவசாயிகள் தனித் தனியாக தொடர்ந்த வழக்கை விசார ணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், பயிர் காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்தனர். பல கட்ட விசாரணையின் போது காப்பீடு பெற்ற நிறுவனம் மகசூல் இழப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத் தின் நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பாதிக்கப்பட்ட விவசாயிகள், அவர்கள் செலுத்திய பயிர் காப்பீடுக் கான இழப்பீடு தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து 17 விவசாயிகளின் வங்கி கணக்கில் மொத்தம் 8.62,511 ரூபாயை நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்  பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகையை செலுத்தியது. இதைத் தொடர்ந்து ஆலக்குடி யைச் சேர்ந்த 17 விவசாயிகளும், தஞ்சா வூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் துக்கு வந்து, வழக்கறிஞர்கள், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கோட்ட மேலாளர் சங்கர் ஆகியோரிடம், தங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு பெற்றுக் கொண்டோம்” எனக் கூறினர்.