districts

திருச்சி முக்கிய செய்திகள்

பகுத்தறிவுப் பேரவை

திருவாரூர், நவ.1- திமுக திருவாரூர் மாவட்ட கலை இலக்கிய  பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் நூற் றாண்டு விழாவை முன் னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைஞ ரின் கவிதைகள், திரைப் பட வசனங்கள் ஒப்பு வித்தல் போட்டி நடை பெற்றது. இந்நிகழ்ச்சி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலை வாணன் தலைமையில் நடைபெற்றது.  போட்டியில் மாவட் டம் முழுவதும் உள்ள  பல்வேறு பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று  இடங்களைப் பிடித்த  மாணவ-மாணவி களுக்கு பரிசு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணி தீவிரம்

திருச்சிராப்பள்ளி, நவ.1 - திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்துவது தொடர் பாக மாநகராட்சி மேயர் அன்பழகன் தலை மையில், துணை மேயர் திவ்யா, நகர் நல  அலுவலர்  மணிவண்ணன், மண்டல தலை வர்கள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா மற்றும்  சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் களுடன் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசுகை யில், “திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்ட லங்களில் 65 வார்டுகளிலும் தலா 50 பேர்  வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தீவிர கொசு ஒழிப்புப் பணி  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண் டும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாநகராட்சிப் பணியாளர்கள் ஒவ்வொரு  நாளும் ஒரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் சேகர மாகியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட  பணிகளை மேற்கொள்வர். கொசுப் புழுக் களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீர் செல்லும் ஓடைகளில் வீசி தடுப் புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரப் பணியாளர்களுக்கு பொது மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டிலோ, வீட்டின் சுற்றுப் புறத் திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த  மண்பானைகள், பிளாஸ்டிக் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்புகள்  ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  வீடுகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீர் தொட்டிகளையும், பாத்திரங்களையும் நன்கு  மூடி பராமரிக்க வேண்டும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்க ளின் புழுக்கள் முட்டையிட்டு அபிவிருத்தியா கிறது. எனவே, ஏடீஸ் கொசுப் புழு வளராமல்  அனைவரும் உரிய தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.  தண்ணீர் தொட்டி மற்றும் கொள்கலன் களை பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு கொண்டு  சுத்தம் செய்து கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீணான பொருள்களான  பிளாஸ்டிக் டப்பா, டயர், உடைந்த குடங்கள்  போன்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.

கருத்தரங்கம்

திருவாரூர், நவ.1 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவா ரூர் நகரக் குழு சார்பில் தமிழ்நாடு அமைப்பு தின கருத்தரங்கம் கட்சியின் நகரச் செயலாளர் எம். தர்மலிங்கம் தலைமை யில் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு  கருத்துரை ஆற்றினார்.  கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், எம்.கலைமணி, மாவட்ட குழு  உறுப்பினர் ஜி.பழனி வேல் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள் நடல்'

பாபநாசம், நவ.1 - சுற்றுச்சூழல் மேம் பாட்டிற்காக தஞ்சாவூர்  மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளா கத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் வட் டார வளமைய மேற்பார் வையாளர் (பொ) முரு கன், பள்ளித் தலைமை யாசிரியர் ரமேஷ், தமி ழன் பசுமை கரங்கள் லெனின் பாஸ்கர், ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போன்று தமிழன் பசுமை  கரங்கள் சார்பில் பாப நாசம் ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு வேம்பு, புங்கன், நெல்லி, பாக்கு  உள்ளிட்ட மரக்கன்றுகள் தலா 10 வீதம் வழங்கப் பட உள்ளன.

பருவமழை முன்னெச்சரிக்கை: வெள்ளம் மீட்பு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தல்

கொள்ளிடம், நவ.1- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஜேசிபி எந்திரம், டிராக்டர், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகளை தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.      மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார அளவில் உள்ள ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமை வகித்தார்.  கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் பேசுகையில், “பருவமழையை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும். தாழ்வான மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, அவ்விடங்களில் மழை நீர் தடைபடாமல் செல்லும் வகையில் வெளியேற்ற வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பிட வசதி போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஏரிகள், பாசன ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளை கண்காணிக்க வேண்டும். மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக, ஜேசிபி இயந்திரங்கள், டிப்பர், டிராக்டர், மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். குப்பைகள் சேராமல் அவ்வப்போது அகற்றி, டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த தகவல்களை தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்

திருவாரூர், நவ.1- திருவாரூர் அருகே புதுப்பத்தூர் கிராமத்தில் டெங்கு  காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை  சார்பில் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ  முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில்  டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு  காய்ச்சல் மருத்துவ முகாம் திருவாரூர் ஒன்றியத்துக் குட்பட்ட புதுப்பத்தூர் கிராமத்தில் சுகாதார ஆய்வாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.  முகாமில் ரத்த அழுத்தம், காய்ச்சல் கண்டறியப்பட்டு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.  மேலும் வீடு  வீடாக சென்று பொதுமக்களுக்கு மழைக்கால சிறப்பு  நோய்கள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது  குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. 

கருவூலக்கணக்கு துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.1 - கருவூல அலுவலர்களை கடுமையாக மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். தேவையற்ற புள்ளி விவ ரங்களை உடனடியாக கோருவதை கண்டித்தும் தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க சார்பில் திருவாரூர் மாவட்ட கருவூல  ஓய்வூதிய வளங்கள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகி பிரகாஷ் தலைமை  வகித்தார். மாவட்டத் தலைவர் செங்குட்டுவன், அரசு  ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் விஜயன், அரசு  ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று மின்நுகர்வோர்  குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, நவ.1- புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை  பொறியாளர் ஜி.சேகர் தலைமையில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும்  கந்தர்வகோட்டை பகுதிக்கான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் 2.11.2023 அன்று காலை 10.30 மணி  முதல் 10 மணி வரை செயற்பொறியாளர், இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெறு கிறது. புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர் வோர் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் பங்கேற்று,  மின்வாரியம் சம்பந்தமான தங்களின் குறைகளை தெரி விக்கலாம் என புதுக்கோட்டை இயக்குதலும் காத்தலும் செயற்பொறியாளர் ஆ.முருகன் தெரிவித்துள்ளார். 

கொள்ளிடத்தில் மழை

கொள்ளிடம், நவ.1- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும்  வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வரு கிறது. இதைத்தொடர்ந்து செவ்வாயன்று இரவு சற்று கன மழையும் பெய்தது. வடகிழக்கு பருவமழை பெய்யத் துவங்கியதால், கடைமடை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். 

கருகிய சம்பா பயிருக்கு  இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், நவ.1- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அரசு காவிரி  தண்ணீரை திறக்க கோரியும், சம்பா பயிர் கருகிய தற்கு, தஞ்சை மாவட்டத்திற்குரிய இழப்பீட்டை வழங்கக்  கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் திரு வள்ளுவர் விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் தஞ்சா வூர் மாவட்டம் திருப்பனந்தாள் கடைவீதியில் விவசாயி கள் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கலைமணி  தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன்,  மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் கணேசன், கொளஞ்சியப்பன், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.பாரதி, ராஜா ராமன் ஆகியோர் பேசினர்.

நவ.4 சமயபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, நவ.1- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட  நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவ.4) அன்று  திருச்சி சமயபுரம் டோல் பிளாசா அருகில் உள்ள தன லட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்  துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த  150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை  வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளன. மேலும், மாவட்டத்தி லுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ள னர்.   இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்புகள் வரை கல்வித் தகுதியுடைய 18 வயது  முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். வேலை நாடுநர்கள்  சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு  புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

10 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்குக!
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா

புதுக்கோட்டை, நவ.1- தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதி யில் கூறியபடி, 70 வயது நிறைவடைந்த வர்களுக்கு 10 சதவீத ஓய்வூதிய உயர்வு  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஓய்வுபெற்ற ஆசிரி யர்கள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை யில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நலச்  சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தர்ணா விற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்  இரா.சரவணன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் க.கருப்பையா உரையாற்றினார். போராட்டத்தை ஆதரித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் மு.முத்தையா, இணைச் செயலாளர் அ.மணவாளன், ஓய்வுபெற்ற போக்கு வரத்து ஊழியர் சங்க மண்டல செயலாளர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பேசி னர். முன்னதாக மாவட்டச் செயலாளர் கா. செயபாலன் வரவேற்க, பொருளாளர் நா. கிருஷ்ணன் நன்றி கூறினார். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 70 நிறைவடைந்தவர்களுக்கு 10  சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும்.  நீதிமன்றத் தீர்ப்பின்படி 80 வயதை எட்டிய வுடன் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க  வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலவினத்தை அரசே முழுமையாக ஏற்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை  ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று மூத்த  குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் கட்டணச் சலுகையை ஒன்றிய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.