அறந்தாங்கி, செப்.8 - அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார். அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 361 பேர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 276 பேருக் கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப் பட்டன. பின்னர் அமைச்சர் பேசுகையில், “ஏழை-எளிய மாணவ, மாணவிகளின் நல னுக்காக தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங் களை செயல்படுத்தி வருகிறார். மாண வர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினார்.