districts

மாஞ்சோலை அருகே பல்லுயிர் பெருக்க பூங்கா அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு

திருநெல்வேலி, ஜூன் 3-

    திருநெல்வேலி மாவட் டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் உள்ள காக்காச்சி என்ற பகுதியில் ரூ.7 கோடி மதிப் பில் பல்லுயிர் பெருக்க  பூங்கா அமைக்கப்படும் என  தமிழக அரசு அறிவித் துள்ளது.  

    களக்காடு முண்டந் துறை புலிகள் காப்பக அம்பை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பாது காக்கப்பட்ட வனப்பகுதி யில் இந்தப் பூங்கா அமைய  இருக்கும் நிலையில் பல்லு யிர் பூங்கா அமைப்பதற்கான இடத்தை   சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ  ஆய்வு செய்தார். அப்போது அம்பை வனச்சரக அலுவ லர் நித்யா உடனிருந்தார்.

   பூங்கா அமைக்க காக் காச்சி, மாஞ்சோலையை உட்பட மூன்று இடங்களை  ஆய்வு செய்த அவர்கள் மணி முத்தாறு வனச்சோதனைச் சாவடியில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மணிமுத்தாறு சுற்று வட்டாரப் பகுதியைச்  சேர்ந்த 100-க்கும் மேற்பட் டவர்கள் மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். அந்த  மனுக்களில், “வனப்பகு தியில் அமைந்துள்ள வனப் பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்தி ரையாகவும், இருசக்கர வாக னத்தில் செல்லவும் வனத் துறையினர் அனுமதி வழங்க வேண்டும். கோவிலுக்கு மின்சாரம் வழங்க வேண்டுமென பிரதான மாக குறிப்பிடப்பட்டிருந் தது.