districts

சம்பா பயிரில் புகையான் தாக்குதல்: ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, பிப்.10- திருச்சிராப்பள்ளி  மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்குப்பட்ட அரசங்குடி, விளாங்குளம், கிளியூர், பத்தாளப் பேட்டை, கோட்டாரப்பட்டி, மாங்காவனம், திருநெடுங்குளம், தேவராய நேரி, வாழவந்தான் கோட்டை, துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் 12 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா  (பொன்னி நெல்) சாகுபடிசெய்யப்பட்டுள் ளது.  பத்து முதல் 15 நாட்களில் அறுவடைக்கு  தயாராக உள்ள நிலையில், சமீபத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் விளைந்த நெற்பயிர்களில் புகையான்  மற்றும் குலை நோய் தாக்கியுள்ளது. இதனால் பயிர்கள் முற்றிலும் கருகி நெல்மணிகள் வீணாகி விட்டன. பாதிக்கப்பட்ட விளை நிலங்களை  தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் தர்மராஜ், வேணுகோபால், சிவமணி, ஆறுமுகம், ரங்கராஜ் விஸ்வநாதன் ஆகியோர்  பார்வையிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், “டெல்டா மாவட்டங்களில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் திரு வெறும்பூர் உள்ளது. டெல்டா மாவட்டத்தில் ஏற்படும் அனைத்துப் பாதிப்பும் இங்கு ஏற்படுகிறது. டெல்டா விவசாயிகளுக்குக் கிடைக்கும் நிவாரணம் எதுவும் இப்பகுதி விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.  புகையான் மற்றும் குலை நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடும், பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத்  தொகையும், வழங்கவேண்டும்.  கூட்டுறவு உள்ளிட்ட விவசாயச் கடன்களை தள்ளுபடி செய்ய  மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறை அதிகாரிகளும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.