திருச்சிராப்பள்ளி, மார்ச் 28- திமுக அரசு தமது தேர்தல் வாக்குறுதியில் உறுதி யளித்தபடி புதிய பென்சன் திட்டத்தை ரத்துச் செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்புக்கான ஊதி யத்தை வழங்கவேண்டும். மீண்டும் ஒன்றிய அரசு வழங்கியது போல் 2023- ஆம் ஆண்டு ஜனவரி முதல் நான்கு சதவீத அகவிலைப் படி வழங்கவேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தினர் (செவ்வாய்) ஒரு நாள் அடையாளப்பூர்வ வேலைநிறுத்தம் நடத்தினர். திருச்சிராப்பள்ளி மாவட் டத்தில் இரண்டாயிரத்திற் கும் மேற்பட்ட அரசு ஊழி யர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாகப்பட்டி னம் மாவட்டத்தில் 850 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2500 பேர், புதுக்கோட்டை யில் 6,000 பேர். கரூர் மாவட் டத்தில் 600 பேர் பங்கேற்ற னர். நமது நிருபர்கள்