மயிலாடுதுறை, அக்.23 - தமிழக மீனவர்களை தாக்கிய இந்திய கடற் படையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்.21 அன்று மயி லாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் உள்ளிட்ட மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய கடற்படை தாக்கியுள்ளது. ஆதார் உள்ளிட்ட அடையாளத்தை காண்பித்த பிறகும் தொடர் தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையை கண்டித் தும், தாக்குதலில் படுகாய மடைந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும். இதுபோன்ற தாக்கு தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டச் செயலா ளர் அ.அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள், மாண வர் சங்க மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் மாரியப்பன், தலைவர் ரவீந் திரன் மற்றும் வாலிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.