districts

img

இந்திய பத்திரிகை தினம் தீக்கதிர் முகவர் எஸ்.செல்வம் கவுரவிப்பு

புதுக்கோட்டை, ஜன.29 - இந்திய பத்திரிகை தினத்தையொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீக்கதிர்  நாளிதழை புதுக்கோட்டை நகரில் விநியோ கம் செய்து வரும் எஸ்.செல்வம் உள்ளிட்ட பத்திரிகை முகவர்கள் புதன்கிழமை கவுர விக்கப்பட்டனர். புதுக்கோட்டை மரம் நண்பர்களும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து தினந்தோறும் பத்திரிகை விநியோ கம் செய்யும் முகவர்களை கவுரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில்,  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சைக்கிளி லேயே பயணித்து வீடுகளுக்கு பத்திரிகை  விநியோகம் செய்யும் தீக்கதிர் செல்வத்தை  கேட் வெட்ட வைத்தும், அவருக்கு பயனாடை  அணிவித்தும் கவுரவித்தனர். அவருடன் பல்வேறு பத்திரிகைகளை விநியோகம் செய்யும் 25 பேரும் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் வாசகர் பேரவை செயலா ளர் பேரா.சா.விஸ்வநாதன், மரம் நண்பர்கள்  அமைப்பின் செயலாளர் ப.ராதாகிருஷ்ணன், உறுப்பினர்கள் பிரகாஷ், தினேஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.