districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிகழ்கால போக்குகளும், எதிர்கால பணிகளும் என்ற தலைப்பில் மாநில செயலாளர் பாலா, மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் பேசினர். முன்னதாக, உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 35 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷூக்கு நினைவு பரிசு வழங்கி, பாராட்டு விழா நடைபெற்றது. தேர்தல் பணியாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாநகர் மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.