districts

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு பேராபத்து ஏற்படும்

பெரம்பலூர், ஏப்.6 - பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.என்.அருண்நேருவை ஆதரித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் காந்தி சிலை அருகில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகி யோர் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். அப்போது தொல்.திருமாவளவன் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அதிமு கவை மட்டும் எதிர்க்கட்சியாக கருதி யிருந்தால், தமிழகத்தோடு பிரச்சா ரத்தை நிறுத்தி இருக்கலாம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.விற்கு எதிராக  கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி, தற் போது ராகுல் காந்தியோடு பிரச்சாரம் செய்யவுள்ளார்.  கடந்த 10 ஆண்டுகளில் அதானியும்,  அம்பானியும் மட்டுமே வளர்ந்துள்ள னர். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடைகள் இருக்காது. நூறு  நாள் திட்டம் இருக்காது. இந்தியா விற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். அம்பேத்கர் வகுத்து வைத்த அரசிய லமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும்.  அரசியலமைப்புச் சட்டம் சொல்கிற  சகோதரத்துவம், சிறுபான்மையின ருக்கு பாதுகாப்பு, அரசியல், சமூக நீதி, சமத்துவம் போன்றவைகளுக்கு ஆபத்து ஏற்படும். இந்தியாவின் தேசி யக் கொடி இருக்காது. காவிக் கொடி யாக மாறிவிடும். பா.ஜ.க.விற்கு ஆபத்தாக இருப்பது  இந்த அரசியலமைப்புச் சட்டம்தான் என்று அவர்கள் கருதுகின்றனர். மீண்டும்  மோடி ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டத்தை ஒழித்து விடுவார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் ஆதரவோடு தான் பல்வேறு சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வந்துள்ளது. சிறுபான்மை வாக்குகளுக்காக அதிமுக-பாஜக ரகசிய  கூட்டணி அமைத்து தனித்து நிற்கின்ற னர்” என்றார்.  திமுக மாவட்டச் செயலாளர் வீ. ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச்  செயலாளர் பி.ரமேஷ், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், காங்கி ரஸ் மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.