மதுரை, மே 7-
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரண மாக சுமார் 5,000 ஏக்கர் எள் பயிர்கள் சேதமடைந் துள்ளன. திருவாரூர், தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வெப்பத் திலிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் குளிர்பானங்கள் அருந்துவதும், குளிர் பிரதேசங்க ளை தேடியும் சென்று வருகின்றனர்.இந்த நிலை யில் கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வகை யில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதன்படி திருவாரூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. Also
இந்தநிலையில், திருவாரூர் மாவட்டத்தில் தொ டரும கனமழை காரணமாக சுமார் 2,000 ஏக்கர் எள் பயிர் சேதமடைந்துள்ளது. எள் வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாகுபடி செய்து பூத்து காய்க்கும் தருணத்தில் இருந்த எள் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.
நடப்பு மே மாதத்தில் இதுவரை 178 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 4-ஆம் தேதி மட்டும் 74 மில்லி மீட்டர் மழை பெய்தது. மானாவாரி இறவைப் பயிரான எள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அதிக அளவு நீர் தேங்கி இருப்ப தால், பயிர் வாட ஆரம்பித்து விட்டது
பருத்தியும் தப்பவில்லை
திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், நீடாமங்கலம், குடவாசல் பகுதிகளில் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி வயல்க ளில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு வழி யில்லாத நிலையில் பருத்தி விவசாயிகள் பாதிக் கப்படுவர் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கலியபெருமாள். எள் பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ள தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெ டுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையால் ஏற்பட்டுள்ள பயிர்ப் பாதிப்பு குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) லெட்சுகாந்தன், (ஞாயிறன்று) வலங்கைமான் பகுதியில் பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்து வதாகத் தெரிவித்தார். மேலும் திருத்துறைப் பூண்டி, கோட்டூர் பகுதியிலும் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. மழை தொடர்ந்தாலும் தண்ணீர் வடிவதைப் பொறுத்துத்தான் பாதிப்பை கணக்கிட முடியும். திங்கள்கிழமை (இன்று) பயிர் பாதிப்பின் விவரங்களை தெரி விப்பதாகக் கூறினார்.