districts

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை தஞ்சாவூர் மேயர் தகவல்

தஞ்சாவூர், மே 28-  

    தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் செய்தி யாளர்களிடம்  கூறியதாவது:

    தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்துப்  பகுதிகளிலும் 10- ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாண வர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும், இதற்கான விண்ணப்பத்தை மாநகராட்சி அலுவலகத்தில்  பெற்றுக்கொள்ளலாம் எனவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பகிரப்பட்டு  வருகிறது.

    இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறியா மல் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாநக ராட்சி அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பம் கேட்கின்ற னர். இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படு கின்றனர்.  

    மாணவர்களின் ஊக்கத்தொகைக்கு என மாநகராட்சி  அலுவலகத்தில் எந்த விண்ணப்பமும் வழங்கப்படு வதில்லை. இது தவறான தகவலாகும். இதுபோன்று சமூக  வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்  கூறினார்.