மயிலாடுதுறை, நவ.2- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி யில் ரூ.1 கோடியே 62 லட்சம் செலவில் புதிதாக கட்டப் பட்ட வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து, மயிலாடுதுறை கொண்டல், அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளை ஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயி லாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா மற்றும் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.