districts

img

கொரடாச்சேரி, குடவாசலில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு

திருவாரூர், டிசம்பர்- 27 -  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம், அம்மையப்பன் ஊராட்சி யில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் சார்பில் குழந்தை நேயப்பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திறந்து வைத்தார். திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் உடனிருந்தார்.  ரூ.33.12 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்ப றைகள் கொண்ட புதிய கட்டிடத்தில் வண்ண  எழுத்துகள் மற்றும் படங்கள் வரையப் பட்டு, இயற்கையான சூழலில் கல்வி பயிலும்  வகையில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது  இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவ லர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், அம்மையப்பன் ஊராட்சி மன்றத் தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர். இதேபோல் குடவாசல் ஒன்றியம், அன்ன வாசல் ஊராட்சி, பெருமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு குழந் தைநேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம் பாட்டு திட்டம் 2022-2024 நிதியாண்டில் ரூ.33.16  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், வட்டார கல்வி அலுவலர் குமரேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். குடவாசல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தென் கோவன் புதிய பள்ளி கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.