districts

img

பசுமை வகுப்பறை திறப்பு விழா

புதுக்கோட்டை, ஜூன் 10-  

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பசுமை வகுப்பறை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

     ‘மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்’ என்பதை விளக்கும் வகையில் பசுமை வகுப்பறையை பள்ளியின் மேலாண் இயக்குநர் நிவேதிதா மூர்த்தி திறந்து வைத்தார்.  

    திறப்பு விழாவிற்கு தலைமை வகித்து பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும்போது, பசுமை வகுப்பறையைச் சுற்றிலும் மரக்கன்றுகள், பூந்தொட்டிகள், வைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைக்கு வரும் மாணவர்கள் கண்ணைக்கவரும் வகையில் அமைந்த பச்சை வண்ணங்களைக் கண்டு வியந்து மகிழ்வார்கள். மாணவர்களின் எதிர்காலம் பசுமையாய் அமைவதோடு மரம் வளர்த்து மண்வளம் காக்கவேண்டும் என்ற எண்ணம் பசுமையாய் அவர்களுக்குள் பதியவேண்டும் என்ற வகையில் இந்த பசுமை வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.