districts

img

திருவோணத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு

தஞ்சாவூர், ஜன.13-  தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், தோப்புவிடுதியில் சுமார் 4  ஏக்கர் பரப்பளவில் அர சினர் தொழிற்பயிற்சி நிலை யம் மற்றும் பயிற்சியாளர் தங்கும் விடுதி ஆகியவை  ரூ.6,63,038 ஆயிரம் மதிப்பீட் டில் கட்டப்பட்டுள்ளன.  இதனை, திங்கட்கிழமை காணொலி மூலம் அமைச்சர்  சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அலு வலர்கள் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவோணம் தோப்பு விடுதி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வரு வாய் அலுவலர் தெ. தியாகராஜன், தஞ்சை மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவை யாறு), என்.அசோக்குமார் (பேராவூரணி) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, திருவோணம் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் சோம. கண்ணப்பன், திருவோணம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், மண்டல பயிற்சி இணை இயக்குநர் ஜான் போஸ்கோ ஆகி யோர் சிறப்பித்தனர்.  இதில், திமுக நிர்வாகி கள், மக்கள் பிரதிநிதிகள், கிராம பிரமுகர்கள், ஆசிரி யர்கள், பயிற்றுநர்கள், மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர். தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.லெட்சுமி காந்தன் நன்றி  கூறினார்.