பெரம்பலூர், ஜூன் 24 -
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற் றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகா மினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஆட்சியர் க.கற்பகம் தலை மையில், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபா கரன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு அரசு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நடத்தும் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனா ளிகள் பதிவு செய்யும் முகாமை, திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பார்வை யிட்டார். முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மர மடக்கி, அன்னவாசல் ஒன்றி யம் வயலோகம் ஆகிய கிரா மங்களில் இலவச பன்னோ க்கு சிறப்பு மருத்துவ முகாம் கள் நடைபெற்றன. அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற மருத்துவ முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மரமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற முகாமினை, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தொ டங்கி வைத்து,
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, சட்டமன்ற உறுப்பி னர் டாக்டர் வை.முத்துராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கரூர்
கரூர் மாநகராட்சி வெங்கமேடு ஈக்விடாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் பார்வை யிட்டார். சட்டமன்ற உறுப்பி னர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாம சுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் க. கவிதா உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.
நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை சார்பில் பன் நோக்கு மருத்துவ முகாம் நடை பெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி சிறப்புரை யாற்றினார்.
இம்முகாமில் ரத்த பரிசோ தனை மூலம் சர்க்கரை நோய் கண்டறிதல், இதயம் தொடர் பான நோய்கள், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு நோய் களுக்கு சிகிச்சை பெற மருத்துவர்கள் வருகை தந்த னர். முழு உடல் பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனை களும் செய்யப்பட்டன. சுற்றுப் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி மக்களும் இம்முகாமை பயன்படுத்திக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌத மன், நாகை சட்டமன்ற உறுப் பினர் ஆளுர் ஷாநவாஸ், சிக்கல் ஊராட்சி மன்ற தலை வர் விமலாராஜா, சிபிஎம் நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா ஆகி யோர் கலந்து கொண்டனர்.