திருவாரூர், ஏப்.29-
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் மேலமணலி கிராமத்தில் பனைய னார் வடிகாலில் தூர்வாரும் பணியினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலை வர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனி ருந்தனர்.
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை தூர்வா ரும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளின் தூர்வாரும் பணிகள் பனையனார் வடிகால் 11:50 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படவுள்ளது. இதன் மூலம் கர்ணா வூர், ஓகைபேரையூர், மேலமணலி, ஆத்தூர், ஈழங்கொண்டான். பூந்தாழங்குடி ஆகிய பகுதிகளில் 500 ஏக்கர் பாசன நிலம் பயன டையும். இந்த தூர்வாரும் பணி கர்ணாவூர் முதல் ஊட்டியானி வரை பணி நடைபெ றும்.