districts

img

உலகளவிலான ரோல் பால் போட்டியில் சின்னாளப்பட்டி மாணவ- மாணவிகள் வெற்றி

சின்னாளப்பட்டி, டிச.12- இலங்கையில் நபாக மாவட்டம், சுமேதா கல்லூரி யில் உலக அளவிலான ரோல் பால் போட்டிகள் டிசம்பர் 6, 7  ஆகிய தேதிகளில்  நடைபெற்றது.  இந்த போட்டியில் இந் திய அணி சார்பில் 50 பேர் கலந்து கொண்டனர். இந்த 50 பேரில் திண்டுக்கல் சின்  னாளப்பட்டி ராஜன் உள்  விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற ஒரு மாணவி உட்பட 9 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு, 17 வயதுக்கும் மேற்  பட்டோர் (பெண்கள்) ஆகிய 2 பிரிவுகளில் முதல் பரிசும், 11 வயதுக்குட்பட்டோர், 17  வயதுக்கும் மேற்பட்ட சீனி யர் பிரிவிலும் இரண்டாம் பரி சும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு சான்றி தழ், கேடயம் வழங்கப்பட் டது. இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்று  திரும்பிய திண்டுக்கல் மாண வர்கள் 9 பேருக்கு சின்னா ளப்பட்டி ராஜன் உள்விளை யாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. மாண வர்களை சர்வதேச நடுவரும், பயிற்சியாளரு மான பிரேம்நாத், தென்னிந் திய ரோல்பால் சங்க செய லாளர் சுப்பிரமணியன், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், இந்திய அணி  மேலாளர் ராஜசேகர் மற்றும்  பெற்றோர்கள் பாராட்டி வாழ்த் துக்களை தெரிவித்தனர்.