மயிலாடுதுறை, நவ.3- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை யையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவ லர்களின் ஆய்வுக்கூட்டம் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளை ஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலை மையில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், மயிலாடுதுறை நகர் மன்றத் தலைவர் என்.செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவலர் காமாட்சி மூர்த்தி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04364 - 222 588, மொபைல் எண்: 9487544588, வாட்ஸ்அப் எண்: 8148917588 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.