districts

சந்திரபாடி மீனவர் கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

மயிலாடுதுறை, மே 11-  தமிழக சட்டசபை கூட்டத்தொட ரில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி தாலுகா சந்திரபாடி ஊராட்சி மீனவர் கிராமத்தில் மீன் இறங்கு தளம்  அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார். பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நடைபெற்றுவரும் தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடரின் போது கூறுகையில், “பூம்புகார் சட்டமன்ற தொகுதி 20 கிலோமீட்டர் கடற் கரைப் பகுதியில் மீனவ கிராமங்கள் அதிகமாக உள்ளன. இங்கு மீன வர்கள் அதிக அளவில் வசித்து வரு கின்றனர். இவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சந்திரபாடி ஊராட்சி மீனவர் கிராமம் காரைக்கால் யூனி யன் பிரதேசம் எல்லையை ஒட்டியும்,  மறுபக்கம் நண்டலாறு கரையை யொட்டி ஒரு தீவு போலவும் அமைந்துள்ளது. இவர்கள் தமிழக எல்லையான பொறையார், தரங்கம் பாடி வருவதற்கு 3 கி.மீட்டர் கடந்து வர  வேண்டிய நிலை உள்ளது. இந்த கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டுப் படகு களை பயன்படுத்தி மீன் பிடித்து வரு கின்றனர்.

மழை மற்றும் புயல் காலங் களில் தங்கள் படகுகளை நிறுத்து வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் இப்பகுதி மீனவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட, நண்டலாற்றின் படுவாய் பகுதியில்  ஆற்றை ஆழப்படுத்தி, இருபக்க மும் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து, படகு வருவதற்கு சிறிய  மீன்பிடி படகு இறங்குதளம் அமைத் துக் கொடுத்தால், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்ன மேடு, சின்னங்குடி ஆகிய மீனவ கிரா மத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகு மற்றும் நாட்டுப் படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் படகு களை நிறுத்துவதற்கு அம்மன் ஆற்றை ஆழப்படுத்தி இருபக்க கரை களிலும் கருங்கல் சுவர் அமைத்துக் கொடுத்தால், அவர்களது வாழ்வா தாரம் மேம்படும்.  மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் போது சின்னங்குடி மீனவர் கிரா மத்தில் கட்டப்பட்ட மீன் இறங்கு  தளத்தை பயன்படுத்த முடியாமல்  அப்பகுதி மீனவர்கள் சிரமப்படுகின்ற னர். எனவே அந்த அம்மன் ஆற்றை ஆழப்படுத்தி கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் அமைத்தால், படகுகள் வந்துசெல்ல பயனுள்ளதாக இருக்கும்” என கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், “சந்திர பாடி ஊராட்சி மீனவ கிராமத்தில் 26  விசைப்படகு, 274 நாட்டுப் படகு களை பாதுகாப்பாக நிறுத்தவும், மீன்களை சுகாதாரமாக கையாளு வதற்கும் போதுமான வசதி இல்லாத தால் அந்தப் பகுதி மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்கள் சிரமத்தை போக்கும் வகையில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின  வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு  நிதியின் கீழ் ரூ.10 கோடி செலவில் படகு அணையும் சுவர், மீன் ஏலம் கூடம், வலை பின்னும் கூடம் ஆகிய  வசதிகளுடன்கூடிய மீன் இறங்கு தளம் அமைக்க முதல்வர் உத்தர விட்டுள்ளார். இதனால் 550 மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில்,  மானிய கோரிக்கையின் போது அறி விப்பு வெளியிடப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.