districts

விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் விநியோகம்

தஞ்சாவூர், மே 16 -  

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்க ளில், வேளாண் இடுபொருட்கள் மானியத்தில் விநியோகம் செய்யப்படு கிறது.  

   இதுகுறித்து, சேதுபாவாசத்திரம், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-

   சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 2022-23 ஆம் ஆண்டு கலைஞ ரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்  கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஊராட்சிகளா பள்ளத்தூர், இரண்டாம்புளிக் காடு, கரம்பக்காடு, சேதுபாவாசத்திரம், ரெட்டவயல், அடைக்கத் தேவன், திருவத்தேவன், செம்பியன்மாதேவிபட்டினம், செந்தலை வயல், வாத்தலைக்காடு, ராவுத்தன்வயல், செருபாலாக்காடு மற்றும்    ஏனைய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத் தில் வேளாண் பண்ணைக் கருவிகள், பேட்டரி ஆப்ரேட் ஸ்பிரேயர் களும், நெல்லுக்குப்பின் உளுந்து திட்டத்தில்  வம்பன்-8, விதை கிராம திட்டத்தின் கீழ் வம்பன்-10, வம்பன்-11 போன்ற ஆதார மற்றும் சான்று  பெற்ற  உளுந்து விதைகளும் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானியத்தில் வழங்கப்படுகிறது.  

   விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி இணைய வழி உழவன் செயலில் பதிவு செய்து இடுபொருட் களை மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் பெற்று பயன்பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.