தஞ்சாவூர், ஜூன் 21-
மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில், கல்லூரி மாணவர்களும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரி வித்தார்.
தஞ்சாவூரில், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில், புதிதாக ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதியை புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் அம்பேத்கர் பள்ளி மாண வர்கள் விடுதியும், குந்தவை நாச்சியார் கல்லூரியின் மாணவியர் விடுதியும் ஆய்வு செய்யப்பட்டது. குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவியர் விடுதியில் 50 பேர் தங்கும் அளவுக்கு கட்டப்பட்டு வருகிறது. மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில், கல்லூரி மாணவர்களும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக முழு வதும் உள்ள 336 விடுதிகள் பராமரிப்புக்கு, ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பரா மரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. விடுதி களில் உணவுகள் தரமாக இல்லை என புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.