districts

பேராவூரணி வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

தஞ்சாவூர், மே 10-

     தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் உள்ள  அனைத்து வருவாய் கிராமங்களிலும் வருவாய் தீர்வா யம் (ஜமாபந்தி) பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் வீ.பிரபாகர் தலைமையில், பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.\

    மே 11 (வியாழக்கிழமை) பெருமகளூர் சரகத்துக்கு  உள்பட்ட கிராமங்களுக்கும், மே 16 (செவ்வாய்க்கிழமை) குருவிக்கரம்பை சரகத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கும், மே 17 (புதன்கிழமை) ஆவணம் சரகத்துக்கு உள்பட்ட  கிராமங்களுக்கும், மே 18 (வியாழக்கிழமை) பேராவூரணி சரகத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தணிக்கை நடைபெற உள்ளது.  

   குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு, பேராவூரணி  வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வரு வாய் தீர்வாயத்தில், பொதுமக்கள் தங்கள் மனுக்களை முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தில் இணைய வழி வாயிலாக cmhelpline-dashbord.tnega என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்க ளின் மூலமாகவோ வருவாய் தீர்வாய மனுக்களை பதிவு  செய்ய வேண்டும். வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களி டம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் தெரி வித்துள்ளார்.