மயிலாடுதுறை, ஏப். 6- மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு நேரடி நெல்கொள்முதல் நிலை யங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிக மான நெல்மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட வில்லை. இதனால் ஒவ்வொரு மையங்களிலும் கடந்த இரண்டு மாதங்களாக நெல்மூடைகள் தேங்கி யுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய வட்டங்களில் 170- க்கும் மேற்பட்ட நேரடிக் நெல்கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டு விவசாயிக ளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள் முதல் செய்யப்பட்டது. 100-க்கும் குறைவான நிலையங்களுக்கு மட்டுமே சொந்தக் கட்டடம் உள்ளது. பெரும்பாலான கொள்முதல் நிலை யங்கள் திறந்தவெளியில், கோ வில்கள், சமுதாயக்கூடம், ஊர் பொது இடங்கள் ஆகியவற்றில் செயல்படுகிறது. நெல் மூட்டைகளை கிடங்குக ளுக்கு எடுத்துச்செல்ல போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற் கும் தேவைக்கேற்ப அனுப்பி வைக்காததால் திடீரென பெய்யும் மழையால் நெல்மூட்டைகள் நனைந்து முளைத்து நாசமாகிவரும் நிலையில் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மாதக்கணக்கில் தேங்கி யுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் என்.சந்திரமோ கன் கூறுகையில், “ தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் லாரி களை அனுப்பி கிடங்குகளுக்கு நெல்மூட்டைகளை எடுத்துச் செல்லும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. போதிய கண்கா ணிப்பும் இல்லை. தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் கொள்முதல் முழு மையாக நிறைவடைந்தவிட்டது. ஆனால் நெல்மூட்டைகள் தேங்கிக் கிடக்கிறது. கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை பட்டியல் எழுத்தர்கள் காவல் காத்து வருகின்னர். மாவட்ட நிர்வாகமும், நுகர்பொருள் வாணிபக்கழகமும் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள நெல்மூட்டைகளை கிடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றார்”.