தஞ்சாவூர், ஆக.22-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனை, அரசு இராசா மிராசுதார் மருத்துவ மனை, கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையம் ஆகியவற்றை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற் கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகை யில், “மருத்துவமனையில் அமையப் பெற் றுள்ள அடிப்படை வசதிகளின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. புற நோயாளிகள் சீட்டு கொடுக்கும் இடம், தொற்றுநோய் பிரிவு, ஆய்வகம், மருந்து கிடங்கு, அவசர சிகிச்சைப் பகுதி, கண் சிகிச்சை மையம், சமையலறை, நோயாளி களுடன் உடனிருப்போர் தங்குமிடம், நோயாளிகள் அறை, பிரசவ அறை போன்ற பல்வேறு வசதிகள் மற்றும் மருத்துவமனை யின் அணுகுமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சி தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்தில் மகப்பேறு கால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு உள்ளிட்ட அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளின் தொடர் சிகிச்சையை உறுதி செய்தல், தாய்-சேய் நல குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பிறப்புச் சான்றிதழ் பெறுவ தற்கான வழிமுறைகளை வழங்குதல், மேல்சிகிச்சைக்கான பரிந்துரைகளை உறுதி செய்தல் போன்ற தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அலுவலர்களு டன் ஆய்வு மேற்கொண்டு, அங்கு அனு மதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் கலந்துரையாடினோம். மருத்துவமனை யில் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.
ஆய்வின்போது, தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஆர்.பாலாஜி நாதன், மருத்துவக் கண்கா ணிப்பாளர் மரு.ச.இராமசாமி, மாநகராட்சி ஆணையர் த. சரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.