districts

அரசு பெண்கள் பள்ளியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கும்பகோணம், மே 13-

    கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கல்வி கண்காட்சி நாச்சியார்கோயில் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகம், லயன்ஸ்  சங்கம் மற்றும் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்தப் பட்டது.  

  நிகழ்ச்சிக்கு நாச்சியார்கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான அ.அல்லி தலைமை வகித்தார். மேலாண்மை குழு உறுப்பினர் சபீக்குர் ரஹ்மான் வர வேற்றார். மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழி காட்டுதலை ஜமால் முகமது கல்லூரி பேரா.சலாஹு தீன் வழங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் சுந்தரராஜன்  நன்றி கூறினார்.

  இறுதியாக கல்வி கண்காட்சி நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட துறைகள், ஒன்றிய-மாநில அரசு வேலை வாய்ப்புகள், கல்வி உதவித்தொகை, அரசு போட்டி தேர்வுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பேனர் கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில் 150-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.