districts

img

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 20-  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்  பில் திங்களன்று காத்திருக்  கும் போராட்டம் நடைபெற் றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கணேசன் தலை மை வகித்தார். மாவட்டப் பொருளாளர் டி.லெட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். புருஷோத்தமன், மாவட்ட துணைத்தலைவர் கோவிந்த சாமி, நிர்வாகிகள் பாரதி ராஜா, சொக்கலிங்கம் ஆகி யோர் உரையாற்றினர். சிஐ டியு மாவட்டத் தலைவர் ஆர். ரவீந்திரன் வாழ்த்தி பேசி னார். போராட்டத்தை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி போராட்டம் நடை பெற்ற இடத்திற்கு வந்து சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

;