districts

சிபிஎம் மகளிர் கிளைகளில் 56 பேர் இணைந்தனர்

அம்மாபேட்டை, ஏப்.24-  

   மதுரை வில்லாபுரம் தியாகி லீலாவதி நினைவு தின மான ஞாயிறன்று, அம்மாபேட்டை ஒன்றியத்தில் 4 புதிய  பெண்கள் கட்சி கிளைகள் அமைக்கப்பட்டன. இதில்,  மொத்தம் 56 புதிய பெண் துணைக்குழு உறுப்பினர்கள் கட்சியில் இணைக்கப்பட்டனர்.  

  கோனூரில் 16 பேர் உறுப்பினர்களாக இணைந்த னர். கிளைச் செயலாளராக சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.  வடபாதி உடையார் கோயிலில் 16 பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். கிளைச் செயலாளராக சுகந்தி தேர்வு செய்யப்பட்டார்.

  ஆத்தூரில் 8 பேர் கொண்ட இஸ்லாமியப் பெண்கள்  கிளை ஏற்படுத்தப்பட்டது. கிளைச் செயலாளராக சர்மிளா பீவி தேர்வு செய்யப்பட்டார். ஒன்பத்துவேலியில் 16 பேர் கொண்ட புதிய கிளை அமைக்கப்பட்டு கிளைச்செய லாளராக அந்தோணியம்மாள் தேர்வு செய்யப்பட்டார்.  

  இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டக்  குழு உறுப்பினர் எம்.மாலதி, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கே.முனியாண்டி, வி.மயில்வாகனன், வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.