திருச்சிராப்பள்ளி, மே 1-
இம்ப்காப்ஸ் கிளை விற்பனை நிலை யம், மருத்துவ ஆலோசனை மையம் மற்றும் தொக்கண சிகிச்சை பிரிவுடன் புதிதாக இ.ஆர் பள்ளி எதிரே ஞாயிறன்று திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு திறந்து வைத்தார். திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ் முதல் விற்ப னையை தொடங்கி வைத்தார்.
இம்ப்காப்ஸ் துணைத்தலைவர் டாக்டர் சுரேஷ், இயக்குநர் டாக்டர் விஜயன், சித்த மருத்துவ அலுவலர் சங்க செயலாளர் (பொ) காதர் முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மட்டும் பண்டக சாலையான இம்ப்காப்ஸில் தயாரிக்கப் படும் தரமான சித்தா, ஆயுர்வேதா, மற்றும் யுனானி மருந்துகள் விற்பனை செய்யப்படு கிறது. மேலும் மருத்துவ ஆலோசனை களும் வழங்கப்படுகிறது. தொக்கண சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்பட்டு வருகிறது.