திருச்சி, செப்.1 சென்னையில் இந்த முறை எவ்வளவு வெள்ளம் வந்தாலும், இதற்கு முன் நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அமைச்சர் கே.என். நேரு தெரி வித்தார். ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், வெள்ள காலங்களில் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு என்பது குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்க ளில் வியாழக்கிழமை (செப்.1) ஒத்திகை நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 5 இடங்க ளில் நடைபெறுகிறது. ஒரு லட்சத்து 46 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது தற்போது திருச்சியில் அபாய கட்டம் ஏது மில்லை. கடந்த முறை வெள்ளத்தில் 88 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ஆனால் தற்போது ஏதும் சேதம் அடைய வில்லை என்றார். சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட் டுள்ளது. சென்னையை வெள்ளம் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது.
திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்த படி ரூ. 935 கோடியில் எல்லா இடங்களி லும் பணிகள் நடந்து வருகின்றன. குறித்த காலத்துக்குள் பணிகள் பூர்த்தியடையாமல் இருப்பதற்கு காரணம் மின் வயர்கள், டெலிபோன் வயர்கள், பாதாளச் சாக்கடை குழாய்கள், மெட்ரோ வாட்டர் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. மேலும், மின் கம்பங்களும், மரங்க ளும் இருக்கின்றன. இவை அனைத் தையும் ஒவ்வொன்றாக எடுத்து விட்டு தான் வடிகால் சீரமைப்பு பணி களை மேற்கொள்ள வேண்டியிருக் கிறது. இதற்கிடையே போக்குவரத் துக்கு சங்கடங்கள் ஏற்படும் என்ப தால் சில இடங்களில் சாலையை துண்டிக்க முடியாத நிலை இருக்கி றது. இருப்பினும் ஒப்பந்ததாரர்களை முதலமைச்சரும், நானும் பணிகளை வேகப்படுத்த சொல்லி இருக்கிறோம். இப்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் இணைப்புகள் வழங்கப்படாத பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மோட்டார் உள்ளிட்ட வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த முறை நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. முதலமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரி களும் இதனை முன்னின்று கவனித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.