இராமநாதபுரம், ஜூன் 28-
இராமநாதபுரத் தில் வீடு கட்டுமானப் பணியின்போது கட்டி டம் இடிந்து2 தொழிலா ளிகள் பலியாகினர்.
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்து வராக பணியாற்றி வருபவர்ரமணீஸ்வரி, இவரது கனவர் ஜெயதுரை பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இராமநாதபுரம் சேதுபதி நகர் 4 வது தெருவில் இவர்களுக்கு சொந்தமான வீடு கட்டு மான பணிகள் நடந்து வருகிறது. ஜூன் 28 அன்று படிக்கட்டுகளை உடைத்துக்கொண்டி ருக்கும் போது திடீரென படி உடைந்து கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தசௌந்தரபாண்டி(40), மாதவன் (54) ஆகி யோர் மீது விழுந்தது. இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு பேரின் உடல்களை மீட்டு இராமநாதபுரம்மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.