மின் கம்பத்தில் மோதி தனியார் பேருந்து விபத்து உயிர் தப்பிய பயணிகள்
அரியலூர், ஜூன் 16 - மின் கம்பத்தில் மோதி சாலையை விட்டு வயலில் இறங்கி தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
தஞ்சாவூரில் இருந்து திருமானூர் - திருமழப்பாடி வழியாக திருச்சி வரையில் தினசரி பேருந்து சேவையை ஸ்ரீ பாலாஜி என்ற தனியார் பேருந்து வழங்கி வரு கிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி திங்களன்று காலை சென்ற தனியார் பேருந்து, அரிய லூர் மாவட்டம் திருமழப்பாடி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு சிறிது தூரம் சென்றது.
அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி, வயல் பகுதியில் இறங்கியது. இதனால் பேருந்து முன் கண்ணாடி உடைந்தது. எனினும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மின் கம்பத்தில் மோதி அங்கேயே பேருந்து நின்றிருந் தால் பெரும் ஆபத்து நேர்ந்திருக்கும். ஓட்டுநரின் திறமை யால் அந்த இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று, வயல் வெளியில் பேருந்து இறங்கியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
போதைப் பொருட்களுடன்
பெண் உட்பட 4 பேர் கைது
திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- திருச்சி காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் ரவிச்சந்தி ரன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந் தனர். அப்போது ஜெயில் பேட்டை பகுதியில் ரோந்து சென்ற போது, ஒரு டீக்கடை அருகில் பெண் உள்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் கான்ஸ், விமல், வி ஒன் புகையிலை உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இவை ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 15 கிலோ எடையுள்ளது. விசாரணையில் அவர்கள் ஜெயில் பேட்டையைச் சேர்ந்த சகாயராஜ், சந்திர மோகன் மனைவி ரேவதி, உறையூரைச் சேர்ந்த மாரிமுத்து, வரகனேரியைச் சேர்ந்த பதேஷ் குமார் என தெரிந்தது.
இதே போல் உறையூர் பகுதியில் கஞ்சா விற்றதாக சதீஷ் என்ற வாலிபரை ஆய்வாளர் வெற்றிவேல் தலைமை யிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வத்தலக்குண்டு அருகே தனியார் காட்டில் மணல் கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்
வத்தலக்குண்டு,ஜூன் 17- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே சின்னுபட்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் காடு செக்காபட்டி அருகே மலையடிவாரத்தில் உள்ளது. பிரான்சிஸ் நேற்று காலை காட்டை பார்வையிட சென்றபோது குளம் அளவு மண் வெட்டப்பட்டு ஒரு ஹிட்டாச்சி மற்றும் 2 டிப்பர் லாரி கள் மூலம் மணலை கடத்திக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.
உடனடியாக வருவாய்த் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தார்.விரைந்து வந்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி,வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா,கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா பானு விருவீடு காவல் சார்பு ஆய்வாளர் திலகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் ஹிட்டாச்சி மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர் இதுகுறித்து விசா ரணை நடந்து வருகிறது.
மதுரையில் வாய்க்காலில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு
மதுரை, ஜூன் 17- மதுரை திடீர்நகர் அருகே உள்ள ஹீரா நகரில் அவ்வழி யாக செல்லும் கிருதுமால் நதி வாய்க்காலில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக ஞாயிறன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திடீர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்குச்சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சடலமாகக் கிடந்த குழந்தை நெகிழி பையில் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் இருந்தது. மேலும் குழந்தை இரவிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலைúயிலோ வீசப்பட்டிருக்கலாம். குழந்தை உயிருடன் உள்ளபோதே வீசப்பட்டு உயிரிழந்ததா அல் லது உயிரிழந்த பின்னர் வீசப்பட்டதா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும். எனவே அப்பகுதியில் அண்மையில் பிரசவம் நடைபெற்றவர் களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. பட்டியல் கிடைத்த தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரி வித்தனர்.
உசிலம்பட்டியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு கிட்டங்கியில் தீவிபத்து
மதுரை, ஜூன் 17- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் மயானம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான நூண்ணுரம் செயலாக்க மையம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் தேங்கும் குப்பை களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இந்த மையத்தில் உள்ள இரு கட்டிடங்களில் சேமித்து வைத்து மறுசுழற்சிக் காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் சேமித்து வைத்திருந்த கிட்டங்கியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை பெரு மளவு வெளியேறியது. உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை, டி.கல்லுப்பட்டி தீயணைப்புறை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த கிட்டங்கி பகுதி யில் ஞாயிறன்றுநகராட்சி ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
வரத்து அதிகரிப்பால் விற்பனைக்கு குவிந்துள்ள நாவல் பழங்கள்
கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது
திருநெல்வேலி, ஜூன் 17- நெல்லை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நவாப்பழம் என்று அழைக்கப்படும் நாவல் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
துவர்ப்பு சுவையுடன் கால்சியம் சத்து மிகுந்த நாவல் பழங்களை சாப்பிடு வதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இயற்கையாக கிடைக்கிறது.
பழங்களை சாப்பிட்டவுடன் நாக்கில் ஏற்படும் அடர் ஊதா நிறத்திற்காகவே குழந் தைகள் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள்.தற்போது “மாநகர பகுதியில் நாவல் பழங்கள் விற்பனைக்கு அதிகமாக வந்து உள்ளன. இது தவிர கர்நாடக மாநிலம் மைசூ ரில் இருந்தும் மூட்டை, மூட்டை யாக நாவல் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படு கின்றது.
மைசூரில் இருந்து கொண்டு வரப்படும் நாவல் பழங்கள் அளவில் பெரியதாக காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் விளையும் நாவல் பழங்கள் அளவில் சிறிது குறைவாக காணப்படும்.
வழக்கமாக மாம்பழ சீசன் முதலில் ஆரம்பம் ஆகும். அதனை ஒட்டி பலாப்பழ சீசன் ஆரம்பிக்கும். தற்போது நாவல் பழங்க ளின் சீசனும் ஆரம்பித்து இருப்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பழங்களை வாங்கி செல்கின்றனர்.பாளை மகாராஜா நகர் உழவர் சந்தை பகுதியில் கடந்த வாரம் நாவல் பழம் ரூ.320-க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது விலை குறைந்து ஒரு கிலோ ரூ.240க்கு விற்பனை யாகிறது. வரத்து நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் பழங்களின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரி வித்தனர்.
நத்தம் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியது
ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை
நத்தம், ஜூன் 17- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரந்த மலை மலையூர், வலசு, பள் ளத்துகாடு, லிங்கவாடி மலை யூர் உள்ளிட்ட கிராம பகுதி களில் ஆயிரக்கணக்கான பலாமரங்கள் உள்ளன. ஜூன் முதல் வாரத்தில் அறுவடை யாகி தற்போது விற்ப னைக்கு வந்துள்ளன.
மலைக்கிராமங்களில் இருந்து தலைச்சுமையாக வும், குதிரைகள் மூலமாக வும் அடிவார பகுதிக்கு கொண்டு வரப்படும் இந்த பலாப்பழங்கள் நத்தம் பகுதி யில் விற்பனைக்கு வந்துள் ளது. பலாப்பழங்கள் தற் போது 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வரை விற்பனை செய்யப்படுகிறது.ஒரு பலாப்பழம் குறைந்தது 5 கிலோ முதல் 10 கிலோ வரை எடை கொண்டதாகும்.
ஜம்புத்தீவு பிரகடனத்தின் 224 ஆவது ஆண்டு விழா
சின்னாளபட்டி, ஜூன் 17- வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224வது ஆண்டு விழா, திண்டுக்கல் காந்திகிராம கிரா மிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கொண்டா டப்பட்டது.
காந்திகிராமம் கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக்கழ கத்தின் அரசியல் அறிவியல் மற்றும் மேம்பாட்டு நிர்வாகத் துறை, சிவகங்கையைச் சேர்ந்த மாபெரும் மருது சகோ தரர்களை நினைவுகூரும் வகையில் ஜூன் 16 அன்று ‘ஜம்பு தீவுப் பிரகடன தினத்தை’ ஏற்பாடு செய்திருந்தது. பதிவாளர் (பொ) முனைவர் எல்.இராதாகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். முன்னாள் அரசியல் அறிவி யல் பேராசிரியர் முனைவர் வி.ரகுபதி சிறப்புரையாற்றி னார். சமூக அறிவியல் புலத்தலைவர் முனைவர்.கே.வேலு மணி வாழ்த்துரை வழங்கினார்.