பெரம்பலூர், டிச. 7. நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா மரிப்புத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திர சேகரனின் தொழிற்சங்க விரோத போக்கினை கண் டித்தும் சாலைப்பணியா ளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், இறந் தோர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியா ளர்கள் சங்கத்தின் சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் துறை மங்கலத்திலுள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலை வர் பெ.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ச.மகேந் திரன் துவக்கவுரையாற்றி னார். மாவட்ட செயலாளர் சி. சுப்ரமணியன் விளக்கிப் பேசி னார். மாவட்ட பொருளாளர் ப.சுப்ரமணியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.