districts

போதையில் வாகனச் சோதனை: 2 போலீசார் பணியிடை நீக்கம்

கரூர், ஜன.6 -  மது போதையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட தலைமைக் காவலர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல்நிலையத்திற்குட்பட்ட நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலர்களாக பணியாற்றி வருபவர்கள் கோபிநாத் (40), யுவராஜ் (39). இவர்கள் வியாழக்கிழமை இரவு புன்னம்சத்திரத்தை அடுத்த  குட்டக்கடை சோதனைச் சாவடியில் நின்றுகொண்டு அவ்வழியே வந்த வாகனங்களை சோதனை செய்துள்ளனர்.  

அப்போது இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படு கிறது. போதையில் இருந்ததால் வாகன ஓட்டிகளிடம் தகராறு  செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதையடுத்து வேலா யுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிர பாகரிடம் புகார் அளித்தார்.  அதைத் தொடர்ந்து தலைமைக் காவலர்கள் இருவரை யும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பிரபாகர் வெள்ளிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.