districts

திருச்சி முக்கிய செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற  ஜன.15 வரை அவகாசம்

திருச்சிராப்பள்ளி, ஜன. 5 - தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலை யங்களில் பதினொன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய புத்த பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ,  மாணவியர்களிடமிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு  மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படை யிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்  (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை  பெறுவதற்கான விண்ணப்பங்களை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க ஜன.15 ஆம் தேதி  வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலரை அணுகலாம் என திருச்சி மாவட்ட  ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, ஜன.5 - திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.7) அன்று தனியார்  துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்க ளுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு,  பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு (பி.இ. உள்பட) முடித்த  அனைவரும் (வயது வரம்பு: (18-க்கு மேல் 35- க்குள்) கலந்து கொள்ளலாம். மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள  விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து  கல்வி சான்றிதழ்களின் நகல், சுய விபரக்குறிப்பு  மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொ ழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சிவ ராசு தெரிவித்துள்ளார்.

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.5 - திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.7)  அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சி யரகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை யில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவ சாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதி கள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை,  இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட  கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்பு டைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக் கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தூதுவர்களாகும் கல்லூரி மாணவர்கள் 

அறந்தாங்கி, ஜன.5 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு  பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல் வர்(பொ) பேரா.குமார் தலைமை வகித்தார். மாணவர்கள் கொரோனா தடுப்பூசி தூதுவர்க ளாக மாற உறுதியெடுத்தனர். சிறப்பு அழைப்பா ளராக கலந்துகொண்ட டாக்டர் தெட்சிணா மூர்த்தி “கொரோனா தடுப்பூசிகளும், வளமான  எதிர்காலம் உருவாக்கி தரும் கல்வியும்” என்ற  தலைப்பிலே மாணவர்களிடையே பேசினார். பேராசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

காவல்துறையினர் முகக் கவசம் வழங்கல்

அறந்தாங்கி, ஜன.5 - தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், புதுக் கோட்டை மாவட்ட காவல் கண்காணிளப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவுபடி, காவல் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், சாமிக்கண்ணு, வீர முத்து, இராஜேந்திரன் மற்றும் போலீசார் அறந் தாங்கி பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள்  கூட்டம் உள்ள பகுதிகளில் சென்று மாண வர்கள், வியாபாரிகள் மற்றும் இருசக்கர வாக னத்தில் சென்றவர்களிடம் முகக்கவசம் அணிவதன்  அவசியம் குறித்து கூறி, முகக்கவசம் வழங்கி  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை: ஜன.8 சிறப்பு முகாம் 

தஞ்சாவூர், ஜன.5 - தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப  அட்டை வழங்குவதற்காக ஜனவரி 8 (சனிக் கிழமை) அன்று அனைத்து வட்ட வழங்கல் அலு வலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.   இம்முகாமில் திருநங்கைகள் தங்களது ஆதார் அட்டை, இருப்பிடத்திற்கான ஏதேனும் ஒரு ஆதாரம், புகைப்படம் மற்றும் கைபேசி எண்  ஆகியவற்றுடன் அந்தந்த வட்ட வழங்கல் அலு வலகங்களில்  ஜன.8 அன்று நடைபெறும் முகாம் களில் பங்கேற்று வட்ட வழங்கல் அலுவலரி டம் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பித்து  பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.