மயிலாடுதுறை, நவ.23- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி அனுஸ்ரீ மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளார். தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டி யில் சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி அனுஸ்ரீ, யூ-14 பிரிவில் 200 மீ, 400 மீ ஓட்டப் பந்தய போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று திருவண்ணா மலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அனுஸ்ரீயையும், வெற்றி பெற உறுதுணை யாக இருந்து பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் என்.பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர் சி.வீரமணி, வி.அபிராமி ஆகி யோருக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பி.சித்ரா, உதவி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு வினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.