districts

img

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி

தஞ்சாவூர், ஜூன் 5-  

     தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதி யோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 360 மனுக் களை ஆட்சியரிடம் பொது மக்கள் அளித்தனர்.  

   இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மேலவெளி கிராமம் பரிசுத்தம் நகரினை சேர்ந்த, இளங்கோவன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்ததால் அவரது மனைவி லலிதாவிடம், முத லமைச்சர் பொது நிவாரண நிதியுதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோ லையினை  வழங்கினார்.

   கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்கள் மரு.என்.ஓ.சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ்.ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குண சீலி, மாவட்ட திட்ட அலுவ லர்  (முதலமைச்சர் விரிவான  மருத்துவக் காப்பீடு திட்டம்)  விஜய் ஆனந்த் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 உலக சுற்றுச் சூழல் தினம்

     முன்னதாக, தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே, உலக சுற்றுச்சூழல் தினத் தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாநக ராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில், “பிளாஸ்டிக் மாசு பாட்டை வெல்வோம்” என்னும் பிளாஸ்டிக் தடுப்பு  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சி தலைவர்  தீபக் ஜேக்கப் கொடிய சைத்து தொடக்கி வைத்தார்.  

   அப்போது மாநக ராட்சி ஆணையர் சரவண குமார், உதவி சுற்றுச்சூழல்  பொறியாளர் விஜயபிரியா மற்றும் பலர் உடனிருந்த னர்.