தேர்தல் ஆணையத்தில் புகார்
புதுதில்லி, மே 3 -
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெறுப்பு பேச்சுகள் பேசி வருவ தாகவும், அவர்கள் மீது உடனடி நட வடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணை யத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், விவேக் தங்கா, சல்மான் குர்ஷித், பவன் கேரா ஆகியோர் இதுதொடர் பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதன் பின்னர் இக்குழுவின் சார்பில் விவேக் தங்கா செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகி யோர் வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ள னர். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கலவரம் வெடிக்கும் என்று கூறியுள்ளனர். அமித்ஷா என்ன அர்த்தத்தில் இவ்வாறு பேசினார்? காங்கிரஸ் கட்சி கலவரத்தில் ஈடுபடும் என்று அவர் சொல்கிறாரா?
அரசியல் சட்ட பதவி வகிப்பவர்கள் இது போன்ற வெறுப்பு பேச்சுகளில் ஈடுபடக் கூடாது. அது சட்டத்துக்கு எதிரானது. சமு தாயத்தில் பிளவை ஏற்படுத்தி விடும். அமித்ஷா பதவி ஏற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழிப்படி நடந்து கொள்ளவில்லை.
இதனை தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக்காட்டி இருக்கிறோம். வெறுப்பு பேச்சில் ஈடுபடுவோர் மீது உடனே வழக்குப் பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், அந்த உத்தரவின் நகல்களையும் சமர்ப்பித்துள்ளோம். அதன் அடிப்படையில், 3 பேர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு விவேக் தங்கா தெரிவித்துள் ளார்.