districts

img

கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

சீர்காழி, பிப்.24- வழிதவறி கொள்ளிடம் ஆற்றில் கரையோரம் ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை சிறுவர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள் ளிடம் அருகே உள்ள சரஸ்வதிவிளா கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர்.  அப்போது தண்ணீர் மிகவும் குறைந்த இடத்தில் கரையை ஒட்டிய பகுதியில் ஒரு பெரிய வகை யிலான ஆமை தத்தளித்துக் கொண் டிருந்ததை பார்த்த சிறுவர்கள் அதை பாதுகாப்பாக பிடித்து கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆமையை சிறுவர்களிடம் இருந்து பெற்று வனத்துறை துறையினரிடம் ஒப் படைத்தனர். பின்னர் வனத்துறை யினர் ஆமையை தாண்டவன் குளம் பகுதியில் உள்ள கடலில் பாது காப்பாக விட்டனர்.  இதுகுறித்து வனவர் சிவசுப்பிர மணியம் கூறுகையில், ‘‘ஆலிவர் ரெட்லி ஆமை 300 வருடங்கள் வாழக் கூடியது. டிசம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை ஆழ்கடல் பகுதியி லிருந்து கரைப் பகுதிக்கு வந்து முட்டையிட்டு மீண்டும் கடலுக்கு சென்றுவிடும்’’ என்றார்.