districts

img

நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அரிஸ்டோ மேம்பால பணி மீண்டும் துவக்கம்

திருச்சிராப்பள்ளி,  மே 14 - திருச்சியில் ரயில்வே ஜங்ஷன் அருகில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அரிஸ்டோ மேம்பாலம்-சென்னை அணுகு சாலை இணைப்புப் பணிகளை சனிக் கிழமை மீண்டும் தொடங்கி  வைத்து, திட்ட வரைபடத் தினைப் அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். பின்னர் நகராட்சி நிர்வாகத்  துறை அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “திருச்சி சந்திப்பு அருகில் அரிஸ்டோ சாலை  மேம்பாலம் கட்டும் பணிக்கு ரூ.74 கோடி மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதி 2.2.2011 அன்று வழங்கப்பட்டது. இதன் திருத்திய நிர்வாக ஒப்புதல் ரூ.115.59 கோடி. இதில் திண்டுக்கல் செல்லும் பாதை மற்றும் ரயில்  நிலையம் செல்லும் பாதைக்கான பணிகளும்,  மத்திய பேருந்து நிலையம் செல்லும் பாதை  மற்றும் மதுரை செல்லும் பாதைப் பணி களும் ஏற்கனவே முடிக்கப்பட்டு, போக்கு வரத்திற்கு திறந்து விடப்பட்டன.  சென்னை செல்லும் பாதையில் பாலப் பணிகள் முடிவுற்று 134 மீட்டர் நீளமுள்ள அணுகுசாலை பகுதியானது ராணுவ நிலத்தில் வருகிறது. இந்திய பாதுகாப்புத் துறை அனுமதி வழங்க தாமதமானதால் அணுகு சாலை அமைக்கும் பணி மட்டும் முடியாமல் இருந்தது. தற்போது புதுதில்லி யில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 9.11.2021 அன்று உள்நுழைவு அனுமதி வழங்கி யதன் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த அனுமதி வழங்கியது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது 4.5.2022 அன்று செயலாக்கப்பட்டு, 5.5.2022 அன்று ராணுவ நிலம் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை செல்லும் பாதையில் மீதமுள்ள ரூ.3.53 கோடி  மதிப்பிற்கு அணுகுசாலை, சேவை சாலை,  மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் ராணுவ  நிலம் சுற்றுச்சுவர் ஆகிய பணிகள் சனிக் கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த  பணி மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும்” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,  மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்  நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறி யாளர்கள் கலந்து கொண்டனர்.