districts

திருச்சி முக்கிய செய்திகள்

பிப்.28-இல் புதுகை விவசாயிகள்  குறைதீர்க்கும் கூட்டம்

புதுக்கோட்டை, பிப்.21-  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி 28 அன்று (செவ்வாய்க் கிழமை)  காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக்  கூட்ட அரங்கில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடை பெற உள்ளது.  கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து  கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இல்லம் தேடிக் கல்வி  தன்னார்வலர்களுக்கு பயிற்சி 

அறந்தாங்கி, பிப்.21-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றி யத்திற்குட்பட்ட மணமேல்குடி வட்டார வள மையம் , மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய  மூன்று இடங்களில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலு வலர் செழியன் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார். பயிற்சியில், ஒவ்வொரு மாணவரின் திறன்  களுக்கு நிலை ஏற்ப அனைத்து அடிப்படை திறன்களை யும் மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. 

சிபிஎம் பேரவை 

திருத்துறைப்பூண்டி, பிப்.21-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப் பூண்டி நகர்க்குழு சார்பில் நிதியளிப்பு பேரவை நகரச் செயலாளர் கே.கோபு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டச்  செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் நிதியினை வழங்கி னர். 

ஏபிவிபி தாக்குதல்: மமக கண்டனம்

பாபநாசம், பிப்.21- தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது பாஜக மாணவர் அமைப் பான ஏபிவிபி நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினரால் இடதுசாரி சிந்தனை உள்ள மாண வர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வரு கிறது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர்கள் மிகுந்த ஊக்கத்தோடு தொடர்ந்து வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது புலனாகிறது.  ஜனநாயக ரீதியில் மாற்று கருத்து உடையவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்குதல் நடத்துவது மாண வர் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. எனவே ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறியுள்ளார். 

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான  மருத்துவ மதிப்பீட்டு முகாம்

பொன்னமராவதி, பிப்.21- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீடு பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  முகாமில் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட 100க்கு  மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய  அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல்,  தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, இலவச ரயில் மற்றும்  பேருந்து பயணச்சலுகை, மருத்துவச் சான்றிதழ் வழங்கு தல், அன்னப்பிளவு காப்பீட்டு திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு, அரசின் உதவித்தொகை, உபகர ணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

‘ரயில் மூலம் கஞ்சா கடத்துவதை  தடுக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு’

தஞ்சாவூர், பிப்.21-  ரயிலில் கஞ்சா கடத்துவதை தடுக்க சிறப்பு  குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவ தாக திருச்சி மாவட்ட ரயில்வே காவல் கண்கா ணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர்  கூறுகையில், ‘‘கடந்தாண்டு திருச்சி மாவட்டத்தில் 390 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் பிப்.20 அன்று ஜோலார்பேட்டையில் ஜஸ்வந்த்பூர் ரயிலில் 40 கிலோ கஞ்சா கடத்திய இரு நபரை கைது செய்துள்ளோம்.  திருச்சி மாவட்ட ரயில்வே காவல் நிலை யத்துக்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் பாவூர்சத்தி ரம் காவல் நிலையத்துக்குட்பட்ட ரயில்வே கேட்டில்  இரவு நேர பணியிலிருந்து பெண் ஊழியர் ஒருவ ரிடம் கடந்த 16-ஆம் தேதி போதையில் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.  இதுதொடர்பான புகாரையடுத்து, அந்த நபரை தேடியதில், அவர் கேரள மாநிலம் கொல் லம் மாவட்டம் புனலூரைச் சர்ந்த மு.அனீ்ஸ்(27) என்பது தெரியவந்தது. திங்கள்கிழமை அவரை கேரளாவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளோம். ரயிலில் பாதுகாப்பாக பெண்கள் பயணம்  செய்யவும், பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பாக இருக்கவும் ரயில்வே காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்’’ என்றார்.

லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை  அலுவலருக்கு 4 ஆண்டு சிறை

கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம், பிப்.21- தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா உடையார் கோவில் வடபாதி கிரா மத்தில் வசித்து வரும் ராஜவேலு என்பவர்  தனியார் வங்கியில் விவசாய கடனுக்கு விண்ணப்பித்துள்ளார்.  விவசாய கடன் பெற வங்கியில் நில  மதிப்புச் சான்று கேட்டதால், பாபநாசம்  தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த வரு வாய்த்துறை அலுவலர் கல்யாணசுந்த ரத்திடம் 3.12.2013 அன்று நில மதிப்பு சான்று கோரி விண்ணப்பித்துள்ளார்.  ஆனால், கல்யாணசுந்தரம் நில  மதிப்பு சான்று பெறுவதற்கு ரூ.5 ஆயி ரம் லஞ்சம் கேட்கவே, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜவேலு, தஞ்சை  மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை யினரிடம் புகார் கொடுத்தார். இதன்பெய ரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பாப நாசம் வருவாய்த்துறை அலுவலர் கல்யா ணசுந்தரத்தை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  இந்நிலையில், வழக்கை விசாரித்த கும்பகோணம் குற்றவியல் நீதிபதி சண் முகப்பிரியா, லஞ்சம் பெற்ற கல்யாண சுந்தரத்திற்கு தலா இரண்டு ஆண்டுகள்  என நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம்  சிறை தண்டனை விதித்தும் உத்தர விட்டார்.

பால் உற்பத்தியாளர்கள் சங்க பேரவை

அரியலூர், பிப்.21- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  உட்கோட்டை கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் பி.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாநில நிர்வாகி என்.செல்லதுரை, விவசாய  சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதில் தலைவராக துரை என்கிற மகாதேவன், செயலாளராக பி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மணக்  கரை அழகர், துணை தலைவராக தில்லைநடராஜன், துணை செயலாளராக வேம்புகுடி ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் கொண்ட புதிய கமிட்டி அமைக்கப்பட்டது.  கூட்டத்தில் பால் லிட்டர் 1க்கு ரூ10 கொள்முதல் விலை  உயர்த்தி வழங்கிட வேண்டும், பால் உற்பத்தி செய்யும் அனைவருக்கும் முறையாக போனஸ் வழங்கிட வேண்டும், ஆவின் தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம்

அரியலூர், பிப்.21- அரியலூர் அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் கிடேரி  கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்து, தொடக்கி வைத்தார். அரியலூர் மண்டல இணை இயக்குநர் (பொ) சுரேஷ் கிறிஸ்டோபர், கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில், 4 முதல் 8 மாத வயது வரை உடைய 40 கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு கரு சிதைவு நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 

அரியலூரில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், பிப்.21- அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்  வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் புதன்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடை பெறும் கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவனங்க ளின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள  உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு  தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்  தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோ சனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என்று ஆட்சி யர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

குத்தகை சாகுபடியாளர்களுக்கு நில உரிமை வழங்க கோரிக்கை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப். 21- வழிப்பாட்டு தலங்கள், அறக்கட்டளைகள், மடங்கள் மற்றும் சத்திரங்களுக்கு சொந்தமான நிலங்களின் குத்  தகை சாகுபடியாளர்களுக்கு நில உரிமைக் கோரி அரிய லூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க நிர்வாகியும், ஸ்ரீபுரந்தான் ஊராட்சித் தலைவருமான இரா.உலக நாதன் தலைமை வகித்தார். சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு டி.மணிவாசகம், மாவட்டச் செயலாளர் சொ.ராம நாதன், துணைச் செயலாளர் ப.கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், வழிப்பாட்டு தலங்கள், அறக்கட்ட ளைகள், மடங்கள் மற்றும் சத்திரங்களுக்கு சொந்த மான நிலங்ககளில் குத்தகைக்கு சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளின் பாரம்பரிய சாகுபடி நிலங்களை பறிக்கக் கூடாது. சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு நிலத்திற்கான உரிமை பட்டாவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.